Total Pageviews

Wednesday, December 25, 2013

Merry Christmas

கேளுங்கள், கொடுக்கப்படும். தேடுங்கள், கிடைக்கும்.. தட்டுங்கள் திறக்கப்படும்... 

                                                                               - இயேசு

 Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you...

 

Thursday, December 5, 2013

Famous Musicians' Bhajans

புகழ் பெற்ற இசைக் கலைஞர்களின் குரலில் சாயி பஜன்கள் 

புகழ்பெற்ற திரைப்பட இசைக் கலைஞர்களான மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், திரு.கங்கை அமரன், டாக்டர்.சீர்காழி சிவசிதம்பரம், திரு.மலைசியா வாசுதேவன், திரு.தீபன் சக்ரவர்த்தி, திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியன், திரு.டி.எல்.மகராஜன், திருமதி. பிரியதர்ஷனி, திரு.யுகேந்திரன், திரு.ஸ்ரீராம் பார்த்தசாரதி போன்றவர்களின் குரலில் அற்புத சாயி கானங்கள் கேட்டு மகிழ்ந்திட, பதிவிறக்கம் செய்திட, உங்கள் வீட்டில் சாயி பஜன் ஒலித்திட காண வேண்டிய தளம் : Shirdi Sai Trust


மேலும் பல பாடகர்களின் இனிய சாயி பஜன்கள் பதிவிறக்கம் செய்து, கேட்டு மகிழ்ந்திட பார்க்க வேண்டிய தளம் : Saibaba Bhajans

Baba's Dress- part 4

சாயிபாபாவின் டை -- பகுதி 4

ஏழ்மை நிலையில் பக்கிரியாக, துறவு நிலையில் தனக்கென எதுவும் இல்லாமல் மக்கள் நலன் ஒன்றே நினைத்து- எளிமையாக வாழ்ந்த பாபாவின் உடையும் எளிமையான கப்னி (Kafni) உடைதான். ஷீரடியின் துவாரகாமாயியில் ஒரு மூலையில் பல கப்னி உடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். சாயிபாபா அவ்வளவு சுலபமாக புத்தம் புது உடையைப் பயன்படுத்திவிட மாட்டார். துவாரகாமாயியில் ஒரு பக்கம் அமர்ந்து கிழிந்துபோன தமது கப்னியை தைத்துக் கொண்டு இருப்பார். அதைக் காணும் அன்புச் சிறுவன் தத்யா, (பயஜாபாய் அம்மையாரின் தவப் புதல்வர் இவர். பாபாவை அன்போடு "மாமா" என்று அழைத்த பாக்கியசாலி. தனக்கு அன்னமிட்ட பயஜாபாய் அம்மையாரின் மகனான தத்யாவை தனது சகோதரி மகனாகவே கருதி பேரன்பு கொண்டிருந்தார் சாயிபாபா) குறும்புகள் செய்யும் சுட்டிச் சிறுவன். 

அந்தச் சிறுவன் தத்யா, பாபாவைப் புது உடை அணிந்து கொள்ளுமாறு தொந்தரவு செய்வான். இதைப் பொருட்படுத்தாமல் பாபா தாம் இன்னொரு நாள் அணிந்து கொள்வதாகக் கூறி வழக்கம்போல் ஆடைகளைத் தைத்துக் கொண்டு இருப்பார். இது போலவே நாட்கள் ஓடி விடும். இது கண்டு பொறுத்துக் கொள்ளாமல் பாபா மேல் பாசம் கொண்ட சிறுவன் தத்யா தனது விரல்களால், கப்னியில் உள்ள ஓட்டைகளில் நுழைத்து மேலும் பெரிதாக, அகலமாகக் கிழித்து வைத்து விடுவார். தத்யாவின் இந்த குறும்புச் செய்கையினால் பாபாவினால் அந்த உடையினை அணிந்துகொள்ள முடியாமல் போகும். வேறுவழியின்றி பாபா புது உடை அணிய வேண்டி இருக்கும்.

கப்னி உடைகளைத் தமது பக்தர்களுக்குக் கொடுக்கும் போது பாபா- தான் யாருக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறாரோ, அவருக்குத்தான் கொடுப்பார். பலர் இந்த ஆடை வேண்டி பல நாள் எண்ணி எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களுக்குக் கிடைக்காது. தவச் சக்தி மிகுந்த இறை அவதாரமாம் பாபாவின் உடையைப் பெற்றுக் கொள்ளும் பெரும்பேறு, அந்தத் தகுதியை தம் இயல்பிலேயே உடையவர்களுக்கும், அல்லது அந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கும், சரியான மனோபக்குவம், ஆன்மீக விருப்பம், முன்னோர் செய்த தவப்பயன், மிகுதியான பக்தி மற்றும் அகங்காரமற்ற நிலை, உண்மை அன்பு - இவை உடையோர்களுக்கே கிடைத்திருக்கும் என்று கூறலாம்.

அவ்வாறு பாபாவிடம் இருந்து நேரடியாக அவரின் உடையைப் பிரசாதமாகப் (அன்புப் பரிசு) பெற்ற பாக்கியசாலிகள் - திரு.பலராம் மான்கர், திரு.உதவேஷ் புவா, திரு. காக்கா தீக்ஷித், திரு.தத்யாசாஹிப் நூல்கர் மற்றும் டாக்டர். கேஷவ் பகவந்த் கவான்கர் போன்ற வெகு சிலரே ஆவர்.


(தொடரும்)

Sunday, December 1, 2013

Miracle

ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களின் அதிசய அனுபவம்
       ம்பிக்கை, பொறுமை, விசுவாசம் இவை உடைய பக்தர்களுக்கு இன்றைய நவீன காலகட்டத்திலும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன! ராமர் கதை எங்கெல்லாம் கூறப்படுகிறதோ, அங்கெல்லாம் ஏதோ ஒரு உருவில் ஸ்ரீ ஆஞ்சநேயர் வந்து உட்கார்ந்து விடுவார் என்பது காலம் காலமாக தெய்வ பக்தி மிகுந்த பக்தர்களின் நம்பிக்கை ஆகும். கடந்த 2011 ஆம் வருட காலகட்டத்தில் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ரத்லம் நகரில் (ரத்ன புரி) ஸ்ரீ அனுமார் உபாசகர்கள் கூடி ராமர் கதையினை உபன்யாசம் (ஆன்மீக சொற்பொழிவு) செய்து கொண்டு இருக்கையில், எங்கிருந்தோ ஒரு குரங்கு வந்து தபேலா இசைக் கலைஞர் உட்பட, பண்டிதர்களை ஆசீர்வதித்து பின் பிரசாதமும் சாப்பிட்டுவிட்டு சென்ற அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது.



ஹரே ராம ஹரே ராம சாயி ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண சாயி கிருஷ்ண ஹரே ஹரே 
(Youtube upload by : IshwarDas, Photo Courtesy: www.godwallpaper.in)
 

Baba's Dress- part 3

சாயிபாபாவின் டை -- பகுதி 3

கப்னி உடையில் பாபா - மிக அரிய படம்

       புத்தம்புது கப்னி உடையினை பாபா அணிந்து கொள்ளும் போதெல்லாம், ஏற்கனவே இருந்த தமது கப்னி உடைகளை பிற பக்கீர்களுக்கும், துவாரகாமாயிக்கு உதவி வேண்டி வந்துள்ள பிற சாதுக்களுக்கும் கொடுத்து விடுவார், சாயிபாபா. கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாபாவை நம்பி வந்திருந்த அனைவருக்கும், பாபா புது உடை தரிக்கும் நாள் - ஒரு சந்தோஷமான நாள் ஆகும். ஏன் என்றால் பாபா தரும் உடைக்கும், உணவுக்கும், உதவிக்கும் குறைவே இருக்காது. 1914-ஆம் ஆண்டு ஒரு நாள், துவாரகாமாயியில் பாபா உடைகளை அளித்துக் கொண்டிருந்தார்.அங்கே குழுமியிருந்த பக்தர் கூட்டத்தில் ஒருவரான திரு. நார்கே என்பவர் தம் மனதுக்குள் "எனக்கும் பாபா தனது கரங்களால் ஒரு கப்னி ஆடை தருவார்" என எண்ணினார். இவ்வாறு திரு. நார்கே எண்ணிய உடன் அதே சமயத்தில், அனைவரின் எண்ண ஓட்டமும் நன்கறிந்த சாயிபாபா அவர் பக்கம் திரும்பி "இல்லை.. நீ கப்னி உடை பெற்றுக் கொள்வதில் பக்கீருக்கு உடன்பாடு இல்லை. நான் என்ன செய்வது?" என்று கூறினார்.

சில வேலைகளில் பாபா, திரு.பாலா என்கிற முடி திருத்துபவரை கூப்பிட்டு தலை முடியினை மழித்துக் கொள்வார். தனது மீசையையும் ஒழுங்காக வெட்டிக் கொண்டு பாபா அந்த முடி திருத்துபவருக்கு கணிசமான சன்மானம் அளித்து அனுப்புவார். அந்த காலகட்டத்தில் பெரும்பாலும் பாபா தூய வெண்ணிற கப்னியையே உடுத்தி இருந்தார். பாபாவின் உடை முரட்டுத்  துணிவகையான 'மஞ்ஜார்பத்' துணியில் நெய்யப்பட்டு இருந்தது. இளம் வயதில் பாபா - ஆரஞ்சு அல்லது வெள்ளை நிறங்களில் உடை அணிந்து காணப்பட்டார். பிறகு ஓர் நாள் திரு. காசிராம் ஷிம்பி பச்சை நிறத்தில் கப்னியை தைத்துத் தந்தார். பிற்காலத்தில் பாபா வெண்ணிற ஆடையையே உடுத்தி வந்தார்.

(தொடரும்)

 

Thursday, November 28, 2013

Siva puraanam


சிவ புராணம் 

நம் பழந்தமிழ் நாட்டிலே ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தவ முனிவர் மாணிக்கவாசகர் அவர்களால் இயற்றப்பட்ட நூல், திருவாசகம் ஆகும். அதில் ஒரு பகுதிதான் சிவ புராணம் ஆகும். இப் பிரபஞ்சத்தின் இறைசக்தியாகிய சிவபெருமானாரின் தத்துவத்தை விளக்கும் இந்த தமிழ் மந்திரம் சக்தி வாய்ந்தது. அதன் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டாக, அந்த மந்திரத்தில் வரும் வரிகளான "புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்" என்ற வரிகள் பரிணாமத்தை விளக்கும் அறிவியல் நோக்கில் அமைந்துள்ளது பெரிதும் வியக்கத்தக்கது.
இந்த அற்புதத் தமிழ் மந்திரத்தை தருமபுரம் திரு. சுவாமிநாதன் அவர்கள் பாடக் கேட்ட  தமிழ் மக்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்களாக இருந்திருக்க வேண்டும். தருமபுரம் ப. சுவாமிநாதன் அவர்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம், நன்னிலம் வட்டம்- வீராக்கண் என்ற ஊரில் 1923-ஆம் ஆண்டு பிறந்து, தெய்வத் தமிழ் இசையை உலகம் முழுவதுமுள்ள தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். தனது 12 வயதிலேயே மயிலாடுதுறை நகரத்தின் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற தருமபுரம் ஆதீன மடத்தில் சேர்ந்து திருமுறைக் கலாநிதி திரு.வேலாயுத ஓதுவார் அவர்களிடம் மாணவராக தெய்வத் தமிழ் இசை, சைவ சித்தாந்த மரபில் பயின்று தமது ஆன்மீக வாழ்வினைத் தொடங்கினார். தமிழ்நாடு அரசவைக் கலைஞராக இருந்தவர். கலைமாமணி விருது, இசைப் பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். அவர் தமது 86-ஆம் வயதில் 2009-ஆம் ஆண்டு சென்னையில் காலமானார்.
தருமபுரம் ப. சுவாமிநாதன்
 அவர் பாடிய சிவபுராணம் இசைத் தொகுப்பினை கீழே நீங்கள் கேட்கலாம்:

(இணையத்தில் பதிவேற்றியவர்: திரு. வெங்கட சுப்ரமணியன்)
     


Sunday, November 10, 2013

Baba's Dress - part 2

சாயிபாபாவின் டை -- பகுதி 2

 ஷீரடி சாயிபாபாவின் கப்னியோ, அல்லது அவரின் இலங்கோடு என்னும் இடுப்புக் கச்சையோ பழையதாய்ப் போனால், கிழிந்து போனால் அவற்றை பாபா எவருக்கும் கொடுத்ததில்லை. மாறாக, துனியில் (நெருப்பு-அக்னிக் குண்டம்) இட்டு எரித்து விடுவார். மேலும் அந்தத் துணிகள் கிழிந்துபோனால்தான் எரிக்கப்பட வேண்டும் என்பதில்லை. சில சமயங்களில் ஓரளவு பயன்படுத்தப்பட்ட துணிகளைக் கூடத் துனியில் போட்டு எரித்துவிடுவார், பாபா. சில நேரங்களில் கிழிந்துபோன ஆடைகளைத் தைத்தும் அணிந்து கொள்வது பாபாவின் வழக்கம். 

சாயிபாபா எந்த பக்தனையாவது ஆன்மீகத்தில் முன்னேறச் செய்ய முடிவு எடுத்துவிட்டால், அப்போது அந்த அதிர்ஷ்டசாலி பக்தர் -சாயிபாபா அணிந்திருந்த பழைய துணிகளை அன்புப் பிரசாதமாகப் பெறுவார். பிரம்மச்சரியதவ ராஜயோகியாய் துனி எனும் அக்னிக் குண்டம் அருகில் அமர்ந்திருந்து உதவி வேண்டுவோரின் குறை தீர்த்த முனிவராம் சாயிபாபாவின் துணியிலும் தவக்கனல் மிகுந்திருக்கும். அதனால் அத்துணிகள் சக்தி உள்ளவையாக இருந்தன. ஒரு தடவை சாயிபாபா தனது கப்னியை மஹல்சாபதிக்கு அன்பளிப்பாய் கொடுத்திருந்தார். இதன் பிறகு இல்லறத் துறவியாக குடும்பப் பொறுப்புக்களையும், கடமைகளையும் கவனித்து வந்த அதே சமயத்தில் மஹல்சாபதி அவர்கள், சாகும்வரை சந்நியாசியாக வாழ்ந்தார்.

மற்றோர் சமயத்தில் சாயிபாபா தனது கப்னியை "முக்தாராம்" என்கிற பக்தருக்கு அளித்திருந்தார். அந்த கப்னி அழுக்காக இருந்ததால், முக்தாராம் அதைத் துவைத்து வாடாவில் (தர்மசாலை) காய வைத்து இருந்தார். இதன்பிறகு முக்தாராம் பாபாவின் தரிசனத்திற்குச் சென்று விட்டார். காகா சாஹேப் தீக்ஷித் வாடாவில் காயப் போட்டிருந்த கப்னிக்கு அருகில் வாமன்ராவ் அமர்ந்து பாதுகாத்துக் கொண்டு இருந்தார். அப்போது அதிசயத்தக்க விதத்தில் கப்னித் துணியிலிருந்து பாபாவின் குரலைத் தெளிவாகக் கேட்டார், வாமன்ராவ். " இதோ, முக்தாராம் என்னைக் கொண்டு வந்து, தலை கீழாகத் தொங்க விட்டு இருக்கிறான், பார் " என்ற பாபாவின் குரல் கேட்டது. 

சட்டென்று சுதாரித்துக் கொண்ட வாமன்ராவ் உடனடியாக அந்த கப்னியை எடுத்துத் தாமே அணிந்து கொண்டார். பிறகு வாமன்ராவ் துவாரகாமாயிக்குச் சென்றார். முக்தாராமுக்குக் கொடுத்திருந்த தனது கப்னியை வாமன்ராவ் அணிந்து வருவதைக் கண்ட சாயிபாபா கோபமடைந்தார். ஆனால் ஆன்மீகப் பாதையில் மன உறுதியுடன், தக்க தருணத்தில் சந்நியாசம் பெறுவதில் வைராக்கியமாக வாமன்ராவ் இருந்தார். இந் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆன்மீக வாழ்வில் வாமன்ராவ் மிகுந்த உயர்நிலை அடைந்தார்.

அக்டோபர் 15, 1918, செவ்வாய்க் கிழமை அன்று பாபா சமாதி அடைந்த திருநாளில் ஷீரடியில் ஓர் பழந்துணிப் பை திறந்து பார்க்கப்பட்டது. இந்தப் பையினை எவரும் தொட சாயிபாபா அனுமதித்ததில்லை. அந்த பையில் பச்சை நிற கப்னியும், பச்சை நிற தொப்பியும் இருந்தன. அவை காசிராம் என்கிற தையல்காரர் பாபாவுக்குக் கொடுத்தவையாகும். சில நாட்கள் அவற்றை பாபா அணிந்திருந்தாலும் பின்பு வெண்ணிற மேலங்கியையே பாபா விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்டார். இந்த பை, மேலும் பிற பொருட்களுடன் சமாதி உள்ளே சாயிபாபா பரு உடலுடன் வைக்கப் பட்டது. பாபா அணிந்திருந்த மற்றோர் கப்னி, ஷீரடியில் உள்ள தீக்ஷித் வாடா "சாயி பாபா மியுசியத்தில்" மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதை அந்த அருங்காட்சியகத்திலே இன்றும் காணலாம்.

(தொடரும்)







Sunday, November 3, 2013

Baba's Dress

சாயிபாபாவின் டை -- தொடர்








அன்பு சாயி பக்தர்களே, இந்தத் தொடரில் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா அணிந்திருந்த உடை பற்றி விரிவாகக் காண இருக்கிறோம். "கப்தான்" அல்லது "கப்னி" உடை என்பது கணுக்கால் வரை நீண்டு முழுக் கைகளுடன் உள்ள, பொத்தான்கள் தைக்கப்பட்ட பெரிய மேலாடை ஆகும். இது அக்காலத்தில் கம்பளியினாலோ, பட்டினாலோ, பருத்தியினாலோ, அல்லது காஷ்மீர் கம்பளியினாலோ தயாரிக்கப் பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் அணியும் ஆடையாகும். பெர்ஷியா (பாரசீகம்), வெனிஸ், இந்தியா, மற்றும் சீனப் பகுதிகளில் தயாரானது கப்னி.
சாயிபாபா- பழைய படம் 
சாயிபாபா ஷீரடியில் முதன்முதலாக தென்பட்ட காலங்களில் ஒரு விளையாட்டு வீரனைப் போன்று உடையணிந்து காணப்பட்டார். மிக நீளமாக அவரது தலைமுடி பின்பக்கம் தொங்கிய நிலையில் இருந்தது. மக்கள் சண்டை, சச்சரவு இல்லாமல், "தான்" பலசாலி எனும் கர்வம் இல்லாமல், அகந்தை இல்லாமல் அன்புடனும், அடக்கத்துடனும், சமாதானத்துடனும் வாழ வலியுறுத்தும் வகையில் பல திருவிளையாடல்களை நிகழ்த்தினார், பாபா. அந்த காலகட்டத்தில் தனது உடையையும், வாழும் முறையையும் மாற்றி அமைத்துக் கொண்டார். ஏழ்மைத் துறவும்- இரந்து வாழும் வாழ்க்கை உடைய பக்கீர் போன்று நீண்ட மேலங்கியான கப்னியையும், லங்கோடு எனும் இடுப்புக் கச்சையையும், தலையை முழுவதுமாக மூடிய கட்டும் அணிந்திருந்தார். சிறுவயதில் தனது குருவான மஹான் திரு.வெங்குசா (வெங்கடேசனைக் குறிக்கும் பெயர்) அவர்கள் பயன்படுத்திய அதே துணிதான் இந்த தலைப்பா கட்டு என்று நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

அமர்வதற்கு பழைய கிழிந்த சாக்குப்பை துணியையும், படுக்கையாக கிழிந்த கந்தலான சாக்குத் துணியையுமே பயன்படுத்தினார், சாயிபாபா. இந்நிலையில் கப்னி அணிந்திருந்த பாபா " ஏழ்மை அரசுரிமையைவிட நல்லது, பிரபுத்துவத்தைவிட மிக மிக நல்லது. கடவுள் எப்போதுமே ஏழைகளின் நெருங்கிய நண்பராக உள்ளார்" என்று கூறினார். இந்த காலகட்டத்தில் பாபாவின் உடைமைகளாக களிமண்ணினால் ஆன "சிலும்" என்கிற புகைபிடிக்கும் குழாயும், நீண்ட கப்னி உடையும், தலையில் அணியும்  வெண்ணிறத் துணியும், தகரக் குவளை (டம்ளர்) யும், கையில் வைத்திருக்கும் சிறு கைத்தடி (சட்கா) யும் தான் இருந்தன. சடாமுடி போல திருகி முறுக்கிய நிலையில் பாபாவின் தலைக்கட்டுத் துணி அவரது இடது காது பின்புறம் தொங்கிய நிலையில் காணப்பட்டது. எவ்வித காலணியும் அப்போது அவர் அணிந்திருக்கவில்லை. 

மேலும் பல சுவையான தகவல்களை அடுத்து வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)


Friday, October 25, 2013

Maharashtra

http://www.tutorialspoint.com/images/clipart/build/build17.gifஸ்ரீ சாயிபாபா அவதரித்த மாநிலம்  - மஹாராஷ்டிரா 





சாயிபக்தர்களே, ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவதரித்த இந்தியாவின் மாநிலமான மஹாராஷ்டிரா பற்றிய சுவையான குறிப்புகளை இங்கு காண்போம்:

இந்த மகாராஷ்டிர மாநிலம், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ளது. இந்தியாவின் செல்வச் செழிப்பான மாநிலமும், இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமும், மூன்றாவது மிகப் பெரிய மாநிலமும் இதுவே. இந்தியாவின் நிதி மூலதனத் தலைநகரமான மும்பை- இங்குதான் உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரமும் மும்பைதான். இம் மாநில மக்களின் மொழி மராத்தி ஆகும். கோதாவரி மற்றும் கிருஷ்ணா ஆகிய தென்னிந்திய புனித நதிகள் இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் உருவாகி ஓடி, வங்காள விரிகுடா வரை சென்று கலக்கின்றன. 

இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள்:  மும்பை, புனே(கிழக்கின் ஆக்ஸ்போர்டு), நாக்பூர்(ஆரஞ்சுகளின் நகரம்), நாஷிக்(கும்பமேளா நகரம்), அவுரங்காபாத்(அஜந்தா-எல்லோரா குகைகளின் நகரம்), கோல்ஹாபூர்(கடைகள் மிகுந்த நகரம்), ஷீரடி, அமராவதி, தானே மற்றும் இன்னபிற.


View Larger Map
சென்னை முதல் ஷீரடி வரை தூரம்: ஆந்திர மாநிலம் வழியாக சற்றேறக் குறைய 1239 கிலோமீட்டர்கள்.

இம்மாநிலத்தின் முக்கிய பிரபலங்கள்: அரசர் சிவாஜி, பால கங்காதர திலகர், காந்தியின் அரசியல் ஆசான் கோபால கிருஷ்ண கோகலே, டாக்டர் அம்பேத்கர், ஞானிகளான ஞானதேவ், நாம்தேவ், ஏக்நாத், துகாராம், சமர்த்தர், கஜானன் மஹராஜ், நிவ்ருத்திநாத், சோபான், முக்தாபாய் மற்றும் பலர்.

இம்மாநிலத்தின் முக்கிய ஸ்தலங்கள்: மும்பை ஸ்ரீ சித்திவிநாயகர் கோவில், ஷீரடி சாயி பாபா மந்திர், எல்லோரா கைலாசநாதர் கோவில், பந்தர்பூர்(பண்டரிபுரம்) ஸ்ரீ விட்டல் கோவில், கோல்ஹாபூர் மஹாலக்ஷ்மி கோவில் மற்றும் பல.

இம்மாநிலத்தின் பிரபல உணவுகள்: வடாபாவ், பூரண போளி, கிச்சடி, பாஜி,போஹே, மிசால் பாவ், ஸ்ரீகந்த், மிட்டாய், மோதகம், ஆம்தி மற்றும் பல.

புகழ் பெற்ற கலைப்பொருட்கள்: பித்ரிவேர் நெசவுக் கலைத் துணிகள், கோல்ஹாபூர் செருப்பு மற்றும் நகைகள், நாராயண் பேத் புடவை மற்றும் பைதானி புடவை ரகங்கள்.

சுற்றுலா இடங்கள்: அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், ஷீரடி, டாதோபா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம், கொங்கண் கடற்கரை, மாதேரன் மலை போன்றவை.
 

Wednesday, October 16, 2013

Bhajans

சாயி பஜன் மற்றும் பாடல்கள் 

பாடல் பெயர்: ஆதி சாயிராம்..
Uploaded by : priyasuriya1910



பாடல் பெயர்: சாயிராம்..சாயிஷ்யாம்...
Uploaded by : Anup Singh Choudhary 



இசைத் தொகுப்பு: சாயி தூன் (பாடல் மெட்டு)
வெளியிட்டோர்: venusdevotional 


Sunday, October 13, 2013

Saibakti News

சாயி பக்திச் செய்திகள் 
ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகள் ஷீரடி கிணற்றிலிருந்து கிடைத்தது !

ஷீரடியில் சாயி பாபா வாழ்ந்திருந்த காலத்தில் அவர் வழக்கமாக நீர் இறைத்த கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கிணற்றினை சமீபத்தில் தூர் வாரி சுத்தம் செய்தனர். லெண்டி பாக் பூங்கா பகுதியில் அமைந்துள்ள இக் கிணற்றினை ஷீரடி சாயி பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது. கோவிலுக்கு நீர் வழங்கும் குளம் வற்றிவிட்டதாலும், தண்ணீர் பிரச்சினையை சமாளிக்கவும் இக் கிணற்றினை தூர் வார நிர்வாகம் முடிவு செய்தது. மேலும் நாசிக் நகரின் தர்ணா அணைக்கட்டு நீரும் சரிவர வரத்து இல்லாததால், ஷீரடிக்கு தினந்தோறும் வருகை தரும் ஆயிரங்கணக்கான பக்தர்களுக்கு குடிநீர் அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.  இந்த கிணறை தோண்டி சுத்தம் செய்யும் பொழுது தொழிலாளர்கள் ரூபாய். ஒன்றரை இலட்சம் மதிப்புள்ள காசுகளை கண்டெடுத்தனர். இவை ரூபாய்.1, ரூ.2, ரூ.5 என பல வகைகளில் பக்தர்கள் போட்ட காசுகளாகும். இவை மட்டுமில்லாது சிறு சாயிபாபா சிலைகள், தேங்காய் போன்ற பொருட்களும் எடுக்கப் பட்டன. 

இந்த கிணறு, பூக்கள் சூழ்ந்த நுழைவாயிலுக்கு நேர் எதிரே, மேற்கு மதிற்சுவர் பக்கத்தில் லெண்டி பாக் பூங்காவில் அமைந்துள்ளது. பக்தர்கள் உதவியோடு பாபாவே அந்த காலத்தில் அகழ்ந்து, உருவாக்கிய கிணறு என்பது இதன் சிறப்பாகும். இந்த கிணற்று நீரை அருந்திய சாயிபாபா இதனை பட்கி என்ற பெயரில் அழைத்தார். சுற்று வட்டாரத்தில் சுரம் மற்றும் பிற வியாதிகளிலிருந்து நிவாரணம் அளிப்பதாக இந்த கிணறு பிரபலம் ஆகிவிட்டது. அந்த காலங்களில் மக்கள் இக் கிணற்றிலிருந்து நீர் இறைத்த வண்ணம் இருந்தபோது தண்ணீர் சிறிது சிறிதாக வற்றிவிட்டது. ஆனால் 1983-ஆம் ஆண்டு திரு. ஏ.ஆர்.ஷிண்டே அவர்கள் இந்த கிணறை ஆழப்படுத்திய பிறகு தாராளமாக தண்ணீர் கிடைக்கத் துவங்கியது. அந்த காலத்தில் அங்கு இரண்டு கிணறுகள் இருந்தன. இந்த லெண்டி பாக் பூங்கா கிணறும், சமாதி மந்திரில் இப்போது உள்ள படிக்கட்டு அருகில் இடது புறத்தில் ஒரு கிணறும் இருந்தன. ஆனால் இன்று அந்த இன்னொரு கிணறு இல்லை.

(Courtesy: Rohit behal)

ஓம் ஜலஹிநஸ்தலே க்ஹின்னபக்தர்தாம் ஜலஸ்ரிஸ்திக்ருதே நமஹ:
குடிக்க நீரின்றி பக்தர் (திரு. நானா சாந்தோர்கர்), நீரில்லா இடத்தில் (ஹரிச்சந்திர மலைப் பகுதி) தாகத்தில் தவித்தபோது தண்ணீரை உருவாக்கி தாகம் தணித்தவரே போற்றி 

Sunday, October 6, 2013

Pathways in Hindu Culture

Karma yoga, Gnana yoga, Raja yoga and Bhakti yoga

உலகத்தின் பழமையான கலாச்சாரமும், இடைவெளி இன்றி தொடர்ந்து செழித்து விளங்கும் கலாச்சார வாழ்வியல் முறைதான் ஹிந்துக் கலாச்சாரம். இக் கலாச்சாரம் கடவுளை அறிய, உணர, தொடர்பு கொள்ள, நெருங்க, கடவுளுடன் மனித குலத்தின் உறவை உணர்ந்து கொள்ள உருவாக்கிய பாதைகள்தான் பக்தியோகம், ராஜயோகம், ஞானயோகம், மற்றும் கர்மயோகம் ஆகும். ஏன் இவ்வளவு விதமான மார்க்கங்கள் (அதாவது பாதைகள், வழிகள்) மக்களுக்கு? ஏன் என்றால் இறைவனின் படைப்பில் ஒருவர் கூட இன்னொருவர் போல நூறு சதவிகிதம் படைக்கப் படவில்லை. அதுதான் அந்த மஹா சக்தியின் திறமை. அவ்வாறு உலகின் எந்த ஒரு இனத்திலும் தனி மனிதர்களின் பிறப்பு, வளர்ப்பு, வயது, படிப்பு, அறிவு நிலை, முயற்சி, ஒழுக்கம், பயிற்சி, புரிந்துகொள்ளும் திறன், விருப்பம், மனோபாவம், வாழ்க்கை லட்சியம் இவை மாறுபட்டு, வேறுபட்டு, தனித்தன்மையோடு இருப்பதால், இருக்க அவர்கள் விரும்புவதால்- மனித இனத்தை வழி நடத்த பல விதமான பாதைகள் தேவைப்படுகின்றன. 

எனவே நமது பாரத நாட்டின் யோகிகள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தவச்சீலர்கள், முனிவர் பெருமக்கள் பல்லாயிரம் ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய அற்புத வழிகள் தான் இந்த யோகப் பாதைகள் ஆகும். ஒவ்வொருவரின் வயது, விருப்பம் மற்றும் ஆராய்ச்சித் திறனுக்கேற்ப பக்தியின் மூலமோ, அன்றாட ஒழுக்க வழக்கப் பயிற்சிகளான யோகா, தியானம் மற்றும் மந்திர உச்சரிப்பு என ராஜ யோக முறையின் மூலமோ, புனித நூல்கள் மூலம் ஆன்மீக அறிவைப் பெருக்கி, அறிவைப் பரப்பி ஞானயோகம் பயின்றோ, மக்களுக்கும் வழிபாட்டு இடங்களுக்கும் எல்லாவிதத்திலும் உதவி, தொண்டு புரிவதன் மூலம் கர்ம யோகப் பாதையில் வீறுநடை போட்டுச்  செல்வதன் மூலமோ எல்லாம் வல்ல தெய்வத்தின் பேரருளைப் பெறலாம், கடவுளைக் காணலாம், ஆண்டவருடன் பேசலாம். இறை சக்தி மர்மமான முறையில், நுணுக்கமாக செயல்படுவதை அறிவுக்கூர்மை மேம்பட்டு அனுபவத்தால் உணர்ந்து கொள்ளலாம்.


படிநிலைகள்
பக்தி யோகம் (Devotional service), ராஜ யோகம் (Exercises & Meditation), ஞான யோகம் (Philosophical Research), மற்றும் கர்ம யோகம் (Selfless service & Action) என்ற நான்கு வித வழிகள் இக் கட்டுரையில் உள்ள வலைப்பூ அமைப்பாளரின் விளக்கப் படத்தில் படிகள் போன்று உருவகப்படுத்தப் பட்டுள்ளன. இது ஏனெனில், துவக்கத்தில் வெவ்வேறு பாதைகளாய் தோன்றினாலும் நெடிய வாழ்க்கையில் - ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்லும் ஒருவர் இவை நான்கும் ஒன்றுக்கொன்று உதவியாய் அமைந்துள்ளதைக் கண்டு கொள்வார். ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்போடு உள்ளதைப் புரிந்து கொள்வார். இந்த நான்கில் எந்த ஒரு வழியினாலும் இறை அன்பைப் பெற முடியும் என்றாலும், இவற்றில் மேன்மை அதிகம் உடைய வழி கர்ம யோகமே. இதை நமது ஷீரடி சாயிபாபா பூவுலக வாழ்வில் தெளிவாக, செயல்முறை வடிவில் வாழ்ந்து காட்டியுள்ளார். அதாவது மக்களிடம் பக்திவழியினை (பஜன்கள், ஆடல்-பாடல், ஆரத்தி, இசை, பூஜை, கொண்டாட்டங்கள்) அனுமதித்தபோதும், பிரம்மச்சரிய ராஜயோகியாய் கடுந்தவத்தில் இருந்தபோதும், அனைத்து மதங்களின் ஆழ்ந்த தத்துவங்களை கரைத்துக் குடித்திருந்த பேரறிவு ஞான நிலையில் இருந்தபோதும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் மக்களுடன் கலந்து பழகி - நோயுற்றவர்கள், ஆதரவு அற்றோர்களுக்கு, ஆபத்தில் அவசரத்தில் உள்ளோருக்கு, உதவி தேவைப்படுவோருக்கு அற்புத முறையில் கர்ம யோகியாய் தினந்தோறும், இறுதி மூச்சு அடங்கி மகா சமாதி அடையும்வரை தொண்டாற்றினார். ஊர் உலகிற்காக கடுமையாக உழைத்தார். உதவியை வேண்டும் பக்தர்களை கைவிட்டு விடாது தொடர்ந்தும் உழைத்து வருகிறார்.

சாதாரண மனிதர்களில் ஒருவர் இறையுணர்வில் திளைத்து இருப்பவராக, பல யோகப் பயிற்சி வித்தைகளில் கை தேர்ந்தவராக, பற்பல புனித நூல்களைக் கற்றவராக இருக்கலாம். இவரால் - தனக்கும், தன் குடும்பத்துக்கும், ஒரு சில பேர்களுக்குமே பயன் இருக்கும். ஆனால் ஒரு தலைசிறந்த கர்ம யோகியால் இவ்வுலக மக்களுக்கே லாபம் கிட்டுகிறது. அத்தகைய கர்ம யோகி எவ்வித பிரதிபலனும் எதிர்பார்ப்பவராக இருக்க மாட்டார். அதாவது பிறரிடமிருந்து செய்நன்றி, பணம், புகழ், பதிலுதவி, செல்வம், செல்வாக்கு போன்றவற்றை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டு இல்லாமல் சேவை செய்வதிலேயே அதிகம் மகிழ்ச்சியடைபவராய் இருப்பார். அந்த மனத் திருப்தியே அவருக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கும். அந்த பொதுநலத் தொண்டில் மிகுந்த மன நிறைவு, இறைவனிடம் அதிகமான நெருக்கம், நிம்மதி, வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம், பயன்பாடு, ஒரு தெளிவு - இவையெல்லாம் கிடைப்பதை உணர்ந்து கொள்வார். இத்தகைய கர்ம யோகம் பயில்பவர்- பால், நிறம், உயரம், தோற்றம், இனம், ஜாதி, ஜாதிப் பிரிவு, மொழி, மொழிப் பிரிவு, மதம், மதப் பிரிவு, மாவட்டம், மாநிலம், நாடு என எவ்வித வேற்றுமை உணர்வும் கொள்ளாது "இவ்வுலகமே ஒரே குடும்பம்" ('உதார சரிதானாம் து வசுதெய்வ குடும்பகம்' - உபநிஷத்) என்ற மனோபாவத்துடன் தொண்டாற்றுவார்.

இந்த மேன்மை மிகுந்த வழிகள், உத்திகள், கருவிகள், கலைகள், விளக்கங்கள், விஞ்ஞானபூர்வ அணுகுமுறைகள், ஆன்ம ரகசியங்கள் போன்றவற்றை உலகத்திற்கு அளித்ததுதான் இந்துக் கலாச்சாரத்தின் சாதனை. பெரும் அதிர்ஷ்டசாலிகளான இந்துக்கள் யாவரும் - இத்தகு யோகம் பயிலும் சாதாரண மனிதர்களின் தினசரி வாழ்வில் அன்றாட பிழைகள், தவறுகள், ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகள் ஏற்பட்டால் - இவற்றைப் பார்த்து மூல மெய்ஞானத்தை எடை போடக் கூடாது. சிறிதும் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்ட இந்த வெற்றி வழிகளைத் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மூல நூல்களைப் படித்துப் பார்க்க வேண்டும். நமது பாரம்பரியத்தின் பெருமையை உணர்ந்து, அதைக் காத்திட தொண்டுகள் செய்து, உடல்-மன-ஆன்மீகப் பயிற்சிகள் செய்து, பக்திநெறியும் தழைக்கச் செய்ய வேண்டும். இந்த எடுத்துக்காட்டான வாழ்க்கையே ஷீரடி சாயிபாபாவின் வரலாற்றில் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய விஷயமாகும்.
வாழ்க வளமுடன்...
 

ஓம் சஹஸ்ரநாம லக்ஷிதாய நமஹ:
ஆயிரங்கணக்கான பெயர்களால் அழைக்கப்படுபவரே போற்றி 

Tuesday, October 1, 2013

Malaysia Vasudevan Songs

'Dasganu of Tamil Nadu' Thiru. Malaysia Vasudevan Songs
(Youtube upload by: INRHIND)


















Thursday, September 19, 2013

Lendi Baug

லெண்டி பாக் - பூந்தோட்ம்

லெண்டி பாக் பூந்தோட்டத்தில் பாபா வளர்த்த வேப்ப மரம் மற்றும் போதி மரங்களுக்கிடையில் அவர் விளக்கேற்றிய இடத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படும் நந்தாதீப் விளக்கு - பழைய படம்




லெண்டி பாக் எனப்படும் அழகிய பூந்தோட்டம், ஷீரடியில் பாபாவின் உழைப்பினால் உருவான ஒன்றாகும். இப்பூந்தோட்டம் 'குருஸ்தான்' என்கிற புனித இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. புதர்ச்செடிகளும், குத்துச் செடிகளும் சூழ்ந்த இவ்விடத்தில்தான் பாபா உலாவுவது வழக்கம். அந்தக் காலத்தில் இங்கு ஓடிய கால்வாயின் பெயரால் இப்பூந்தோட்டத்தின் பெயர் 'லெண்டி' என ஏற்பட்டது. காலை மற்றும் நண்பகல் வேளையிலே இங்கு இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் சாயி பாபா இளைப்பாறுவது வழக்கம். இந்த வேப்ப மரத்தடியில் சிறு குழிதோண்டி பாபா மண்விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். அதன் நினைவாக இப்போது இங்கு 'நந்தாதீப்' எனும் விளக்கினை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். 'தீப்க்ரிஹா' என்கிற மார்பிள் கல்லால் ஆன எண்கோண வடிவ விளக்கு மாடத்தினுள் ஓர் கண்ணாடி பெட்டிக்குள் நந்தாதீப் விளக்கு அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. அரச மரம் அல்லது போதி மரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் இடையில்தான் நந்தாதீப் விளக்கு எரிந்துகொண்டு உள்ளது. இந்தப் பூந்தோட்டத்தை எப்போதும் பார்வையிடலாம் என்றாலும், ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷீரடியின் தட்பவெப்ப நிலை இனிமையாக இருக்கும். ஷீரடி- மன்மாடு மாநில நெடுஞ்சாலை அருகே லெண்டி பூந்தோட்டம் அமைந்துள்ளது.

 
Photo Courtesy: Doshi ashutosh, saileelas.org

Friday, September 6, 2013

Free Cataract Surgery

ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை

திரு. சிவாஜி கோண்ட்கர்
கடந்த ஏப்ரல் 1 முதல் நான்காம் தேதி வரை ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த முகாமினை ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், லகானுபாய் அம்ருத்ராய் கோண்ட்கர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஷீரடி சாயிநாத் மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தன. 125 ஏழைகளுக்குத் தனது தாயின் நினைவாக, ஷீரடி முனிசிபாலிடியின் துணைத் தலைவர் திரு. சிவாஜி கோண்ட்கர் இந்த இலவச அறுவை சிகிச்சையை உபயமாக அளித்தார். இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகள், மருந்து, உணவு மற்றும் தங்குமிட செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டார். இறந்த உறவினர் நினைவில், பிடிவாதமாக பழைய சடங்குகளைச் செய்வதைக் காட்டிலும் இதுபோல் ஏழைகளுக்குத் தொண்டு புரிவதையே தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

அங்கு வந்த அனைத்து ஏழை நோயாளிகளுக்கும் டாக்டர் சுனில் சொண்டாகே அறுவை சிகிச்சை செய்தார். இது போன்ற தொண்டு முகாம்களை நடத்திட பலரும் முன்வர வேண்டும் என்று டாக்டர் சுனில் கேட்டுக்கொண்டார். திரு. சிவாஜி கோண்ட்கர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தமது தாயாரின் நினைவாக, ஷீரடி சாயிபாபா பள்ளியில் 10ஆவது மற்றும் 12 ஆவது வகுப்புகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணாக்கருக்கு ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


சிகிச்சைக்கு வந்திருந்த பெண்மணிகள்


(Video Courtesy: rOhiT BeHaL)

ஓம் ஆரோக்கியக்ஷேமதாய நமஹ:

(பக்தருக்கு ஆரோக்கியமும், நலமும் வழங்கி அருள்பவரே போற்றி)











Rudraksha Shawl!

பாபாவுக்குப் பஞ்சமுக ருத்ராக்ஷத்தால் சால்வை!


ஹிந்துக் கலாச்சாரத்தில் ருத்ராக்ஷ மரத்தின் விதைகளுக்கு முக்கிய இடம் உண்டு. சமஸ்க்ருத மொழியில் 'ருத்ரா' என்பது சிவபெருமானையும், 'அக்ஷா' என்பது (அவரது) கண் நீர்த்துளியையும் குறிக்கும். பழமையான புராண இலக்கியங்களில் இந்த ருத்ராக்ஷ மரம் சிவபெருமானின் கண்ணீர்த்துளிகளில் இருந்து உருவாகியதெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்ச முகம்
சிவபுராண புனித நூலில் முன்னொரு யுகத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக ஆழ்ந்த தவ நிலையில் இருந்த சிவபெருமான் தம் கண்களைத் திறந்த பொழுது கீழே பூமியில் விழுந்த கண்ணீர்த் துளிகள் வித்தாகி, ருத்ராக்ஷ மரமாக உருவாயிற்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.ருத்ராக்ஷ விதைகளுக்கு பல மருத்துவ குணங்களும் உள்ளதென பெரியோர் கூறுவர்.இந்த ருத்ராக்ஷ விதைகள் - ஏக முகி, த்வி முகி, த்ரி முகி, சதுர் முகி, பஞ்ச முகி, ஷத் முகி, சப்த முகி, அஷ்ட முகி, நவ முகி, தச முகி, ஏகாதச முகி, த்வாதச முகி, த்ரயோ தச முகி, சதுர்தச முகி ருத்ராக்ஷம்  (1,2,3,4,5,6,7,8,9,10,11,12 எனப் பல முகங்கள்), கௌரிஷங்கர் ருத்ராக்ஷம், கணேஷ் கௌரிஷங்கர் ருத்ராக்ஷம் எனப் பல வகைகளாக உள்ளன. இவை அனைத்தும் காணக் கிடைப்பது மிகக் கடினம்.

ருத்ராக்ஷ மரம், பூ, பழம் மற்றும் பல்வேறு முகம் கொண்ட விதைகள் (Photo Courtesy: Adam Kadmon)
இந்தோனேசியா, இந்தியாவின் இமயமலைப் பகுதி, பீகார், மத்திய பிரதேசம், பெங்கால், அஸ்ஸாம், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் நேபாளில் இம்மரங்கள் காணப்படுகின்றன. நடுத்தர உயரமுள்ள இம்மரங்களின் பூக்கள் வெண்ணிறமானவை. ஆயுர்வேத மருத்துவத்தில் ருத்ராக்ஷ பழங்களும், விதைகளும் பயன்படுத்தப்படுகின்றன. சிவமாகிய திரு நீல கண்டத்தினை நமக்கு மறைமுகமாக உணர்த்துவது போல், ருத்ராக்ஷப் பழம் பிரகாசமான நீல நிறத்தில் உள்ளது வியப்பாக உள்ளது.
பஞ்ச (ஐந்து) முக ருத்ராக்ஷம்

சிவத்தின் வடிவம் - அரிய வகை - ஏக (ஒரே முகம்) முகி ருத்ராக்ஷம்
உடல் உஷ்ணத்தைக் குறைத்திடவும், தோல் நோய், மன நோய், தூக்கமின்மை, இரத்த அழுத்தம், ஆஸ்துமா, சுரம் போன்ற பல வியாதிகளுக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. பல ருத்ராக்ஷ விதைகள் இயற்கையிலேயே நடுவில் துளையோடு உருவாவது தெய்வீகச் சிறப்பு. யோகிகள் மாலையாக அணிவதற்கு வசதியாக மனித இனத்துக்கு ஓர் வரப்பிரசாதமாக இயற்கையாகவே சிறு ஓட்டை உள்ளது. சிவ பக்தர்கள் உடல் ஆரோக்கியத்திற்கும், மரண பயம் அகன்று ஆன்மீகப் பயணத்தில் வெற்றி பெறவும் தம் உடலில் அணிகின்றனர்.
கடந்த செப்டெம்பர் 2, 2013 திங்கட்கிழமை அன்று, சோம பிரதோஷ நன்னாளில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் முழுவதும் பஞ்சமுக  ருத்ராக்ஷத்தால் செய்யப்பட்ட இரண்டு சால்வைகளை பாபாவுக்குக் காணிக்கையாக ஷீரடியில் அளித்தார். 10800 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட ஒரு மாலை சாயி பாபாவின் மூர்த்தி மேல் சாற்றப்பட்டது. 8000 ருத்ராக்ஷங்களினால் செய்யப்பட்ட இன்னொரு மாலை பாபாவின் சமாதி மேல் போர்த்தப்பட்டது.


ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி சிவ சிவ சாயி ஓம் சாயி ஜெய ஜெய சாயி

Wednesday, July 31, 2013

Sai 1000 Mantras!

ஸ்ரீ ஷீரடி சாயிபாபா  சகஸ்ரநாமம்


உயர்திரு ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் இயற்றிய ஸ்ரீ ஷீரடி சாயிபாபா சஹஸ்ரநாமத்தை பிரியா சகோதரிகள் பாடியுள்ளனர். அது இசைத் தட்டாக சென்னையில் கிடைக்கிறது.
ஷீரடி சாயிபாபா சஹஸ்ரநாமம் - படிக்க விரும்புபவர்கள் கீழ்க்கண்ட வலைதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.
http://www.shirdisaitrust.org/sst_sai_sahasranamam.html

ஆங்கிலத்தில் படித்திட:
http://www.shirdisaisociety.org


தமிழில் படித்து மகிழ்ந்திட http://www.saileelas.org/sai/books.php

(Video by: Times Music South)


Monday, July 29, 2013

Simplified Yoga & Family Peace

வளக் லை - ஓர் அறிமுகம்                             

 
(Youtube Uploaded by: Rajendiran S.)


(Videos: vethathiri maharishi)

குடும்ப அமைதி - வேதாத்திரி மகரிஷி அருள் உரை

 

----------- ***------------

Thursday, July 25, 2013

Sai bhakti News

சாயிபக்திச் செய்திகள்
(செய்தி உதவி: rOhit beHaL)

ஜனவரி 24, 2013
ஷீரடி சாயி பாபா கோவிலில் - டெல்லியைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், சுமார் முப்பது லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 998 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட கலசத்தைக் காணிக்கையாக செலுத்தினார். தினந்தோறும் பாபாவின் காலை நேர அபிஷேகத்திற்கு, பழைய வெள்ளிக் கலசத்துக்குப் பதிலாக, இந்தத்  தங்கக் கலசமே பயன்படுத்தப்படும்.



பிப்ரவரி 2, 2013
ஷீரடியில், மும்பையைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், 475 கிராம்கள் எடையுள்ள தங்கச் சிலும் காணிக்கையாக அளித்தார். இது 12.5 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ளது.


ஜூன் 2, 2013
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், ஷீரடியில் இந்திய ரூபாய் முப்பது லட்சம் மதிப்புடைய- 650 கிராம் தங்கத்தில் வைரம் மற்றும் மாணிக்கம் பதிக்கப் பெற்ற மாலையை காணிக்கையாக அளித்தார்.



 ஜூன் 11, 2013
பாபா கோவிலில் ஒரு பக்தர், 700 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடத்தைக் காணிக்கையாக அளித்தார். இது இந்திய ரூபாய் 23 இலட்சம் மதிப்புடையது ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கென்றே அந்த பக்தர் சேமித்த தொகை அந்த பணம் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜூன் 16, 2013
ஷீரடியில் போபாலைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் தலா 300 கிராம்கள் எடையுள்ள இரண்டு சுத்தத் தங்கக் குவளைகள் காணிக்கையாக அளித்தார். இவை இந்திய ரூபாய் 8.5 இலட்சம் மதிப்புள்ளவை.

 

ஜூன் 21, 2013
ஷீரடியில் புது தில்லியைச் சேர்ந்த தொழில் வல்லுநர் ஒருவர் இந்திய ரூபாய் 16.28 இலட்சம் மதிப்புடைய, 51 தங்கக் காசுகளால் கட்டப்பட்ட, 521 கிராம் எடையுள்ள தங்கக்காசு மாலையை பாபாவுக்குக் காணிக்கையாக்கினார்.




ஜூலை 20, 2013
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் தம் தாயாரின் நினைவாக இரண்டு தங்கக் குத்துவிளக்குகளைக் காணிக்கையாக அளித்தார். ஒரு அடி உயரமுள்ள அவை தலா 987.400 கிராம்கள் எடையோடு ரூ.24.26 இலட்சம் மதிப்புள்ளவை ஆகும்.



ஓம் ஸ்ரீ சாயிநாத் மஹராஜ்கி ஜெய்.




Thursday, July 18, 2013

Aarthi Videos

ஆரத்திகளும் பண் இசையும்

1. காலை நேர ஆரத்தி (காகட் ஆர்த்தி)


2. மதிய நேர ஆரத்தி (மத்யான் ஆர்த்தி)


3. மாலை நேர ஆரத்தி (தூப் ஆர்த்தி)



 4. இரவு நேர ஆரத்தி (ஷேஜ் ஆர்த்தி)






(Video by:  Shemaroo Sai Bhakti)

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் புதிய இணையத்தளம்

உலகெங்கும் உள்ள சாயி பக்தர்கள் ஷீரடி சாயிபாபா பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொள்ள வசதியாக உள்ளது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட்- இன் வலைத்தளம். 

இதில் வேறு எங்கும் எளிதில் கிடைக்காத அற்புத ஆரத்திகள், 108 நாமாவளி, ஜெபங்கள், தியான மந்திரங்கள், சத்சரித்திர தமிழ் ஒலிப்பதிவு ஆகியவற்றின் இலவச தொகுப்புகள் கொடுக்கப் பட்டு உள்ளன. இவற்றை எளிதாக அன்பர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

முகவரிகள் : www.sai.org.in, www.sai.org.in/en/audio, online.sai.org.in/#/login
சாயி ஓம்.

Saturday, July 13, 2013

Jhola Bag!

பாபாவின் ஜோலா பை !

சாயி பந்துக்களே (சொந்தம்-உறவுகள்), நாமெல்லாம் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் பிற முக்கிய நபர்கள் சிலரும் தம் தோளில் மாட்டி இருக்கும் ஜோல்னா பையைப் பார்த்திருப்போம். இக்கட்டுரையில் நம் பாபா வைத்திருந்த ஜோலா பை- பற்றிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம். ஜோலா பை என்பது துணியாலான பை அல்லது பணப் பை ஆகும்.

பாபா வைத்திருந்த ஜோலா பை
(Courtesy: rOhit beHaL)

திருமதி. பயஜாபாய்
பாபாவின் மிகச் சிறந்த முன்னோடி பக்தர்களில் ஒருவர்தான், திருமதி பயஜாபாய் அம்மையார் அவர்கள். ஷீரடி புனித ஸ்தலத்திலே சாயி பாபா தமது ஆற்றல்களை, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவதற்கு முன்னாலேயே எவ்வித பிரதிபலனும் எதிர்பாராது, உயர் தரும சிந்தனையுடன் வாழ்ந்த பயஜாபாய் அம்மையார், தினமும் சப்பாத்தி உணவினை சுட்டு எடுத்துக் கொண்டு கடும் வெயிலில் காடுகளில் அலைந்து திரிந்து பாபா தவம் செய்யும் இடத்தினைக் கண்டுபிடிப்பார். பாபாவிற்கு அந்த உணவினை அளித்துவிட்டு வீடு திரும்புவார்.

 எனக்கு இன்னது நடந்தால், நான் உனக்கு இவ்வளவு பணம் கொடுக்கிறேன் என்று கொடுக்கல் வாங்கலாக கடவுளிடம் உரிமையுடன் மக்கள் பேசும் இக் கலியுகத்தில், அன்னபூரணி மாதாவின் வடிவமாக பாபாவிற்கு உணவளித்து தருமம் செய்த பயஜாபாய் போன்ற பெண்மணிகளால்தான் இன்னும் பாரதத்திலும் பிற நாடுகளிலும் சத்தியம் சாகாமல் இருக்கிறது. எதிர்காலத்தில் பல கோடி பக்தர்களுக்கு பல நன்மைகள் அருளப் போகும் ஒருவருக்குத் தான் உணவளிக்கிறோம் என்று பயஜாபாய் அம்மையாருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் உழவாரப் பணி புரிந்த கர்ம யோகி அப்பர் சுவாமிகளைப் போல, இவர் செய்த தன்னலம் கருதா தரும காரியம் அழியாத புகழுடன் விளங்குகிறது. ஷீரடியில் பிற்காலத்தில் பாபா எவ்வளவு தடவைகள் பயஜாபாய் அம்மையாரின் வீட்டிற்கு பிச்சை பெற சென்றபோதும் அவர் உணவு தராமல் அனுப்பியதில்லை.1876- ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் கடும் பஞ்சம் வந்தபோது திருமதி.பயஜாபாய் மற்றும் திரு. நந்துராம் மார்வாடி ஆகியோர் சாயிபாபாவுக்கு உணவளிக்கும் பெரும் பேறு பெற்றனர்.

இவர் போன்ற ஷீரடியின் பல பெண்மணிகளுக்கு பக்தர்களாகிய நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவர் போன்றே தரும சிந்தனையுடன் நம் தமிழ் இளைய சமுதாயம் ஊக்கத்தோடு அன்ன தானம், வஸ்திர தானம், ரத்த தானம், உடல் உறுப்பு தானம், பொருள் உதவி, மருத்துவ உதவி, கல்வி தானம் என - பல வகைகளிலும் நல்லது செய்து நற்புகழும் ஆத்ம திருப்தியும் அடையலாம்.

1918- இல் மஹா சமாதி நிலை அடையப் போகும் முன்பு, பாபா தனது துணிப் பையையும் அதில் இருந்த சில காசுகளையும் தாத்யாவிற்கு அளித்தார்.
திரு. தாத்யா
தாத்யா என்பவர் பயஜாபாய் அம்மையாரின் தவப் புதல்வர் ஆவார். அந்த ஜோலா பையிலிருந்துதான் பாபா கை விட்டு காசுகளை எடுப்பது வழக்கம். ஒன்றுமே இல்லாத வெறும் ஜோலா பையிலிருந்து தங்க காசுகள், வெள்ளிக் காசுகளை எடுத்து தம்மைக் காண வந்த பக்தர்களுக்கு அளிப்பார் பாபா. இன்றுவரை இந்த அற்புதத்தை மக்கள் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் படிக்கும் போது இது என்ன சித்து விளையாட்டு என்று தோன்றலாம். நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் எண்ணற்ற, அசைக்க முடியாத நம்பிக்கை உடைய பக்தர்களின் அனுபவத்தில் இதெல்லாம் பாபாவுக்கு சர்வ சாதாரணம் என்பதை உணர்ந்துள்ளார்கள். அது போன்ற அற்புதங்களை நேரில் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் இன்றும் பலருக்குக் கிடைத்து வருகிறது. அந்த ஜோலா பை சம்பந்தமான ஒளிக் காட்சி கீழே உள்ளது:


இன்று அந்த ஜோலா பை - திரு. முகுந்த்ராவ் பாஜிராவ் கோட்டே பாட்டீல் அவர்களிடம் உள்ளது.

திரு. முகுந்த்ராவ் அவர்கள் திருமதி பயஜாபாய் அவர்களின் கொள்ளுப் பேரனும், தாத்யா அவர்களின் பேரனும் ஆவார். திரு.முகுந்த்ராவ் அவர்கள் அந்த புனித ஜோலா பையினை காசுகளுடன் ஒரு கண்ணாடி பேழையில் வைத்து, கவனமாக தினமும் போற்றிப் பாதுகாத்து வருகிறார்.

புனித ஜோலா பை வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழை

கிண்ணத்தில் வைக்கப்பட்டுள்ள பாபா அளித்த காசுகள்
சாயி ஓம்.