Total Pageviews

Thursday, July 25, 2013

Sai bhakti News

சாயிபக்திச் செய்திகள்
(செய்தி உதவி: rOhit beHaL)

ஜனவரி 24, 2013
ஷீரடி சாயி பாபா கோவிலில் - டெல்லியைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், சுமார் முப்பது லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள 998 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட கலசத்தைக் காணிக்கையாக செலுத்தினார். தினந்தோறும் பாபாவின் காலை நேர அபிஷேகத்திற்கு, பழைய வெள்ளிக் கலசத்துக்குப் பதிலாக, இந்தத்  தங்கக் கலசமே பயன்படுத்தப்படும்.



பிப்ரவரி 2, 2013
ஷீரடியில், மும்பையைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், 475 கிராம்கள் எடையுள்ள தங்கச் சிலும் காணிக்கையாக அளித்தார். இது 12.5 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ளது.


ஜூன் 2, 2013
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர், ஷீரடியில் இந்திய ரூபாய் முப்பது லட்சம் மதிப்புடைய- 650 கிராம் தங்கத்தில் வைரம் மற்றும் மாணிக்கம் பதிக்கப் பெற்ற மாலையை காணிக்கையாக அளித்தார்.



 ஜூன் 11, 2013
பாபா கோவிலில் ஒரு பக்தர், 700 கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட கிரீடத்தைக் காணிக்கையாக அளித்தார். இது இந்திய ரூபாய் 23 இலட்சம் மதிப்புடையது ஆகும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இதற்கென்றே அந்த பக்தர் சேமித்த தொகை அந்த பணம் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜூன் 16, 2013
ஷீரடியில் போபாலைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் தலா 300 கிராம்கள் எடையுள்ள இரண்டு சுத்தத் தங்கக் குவளைகள் காணிக்கையாக அளித்தார். இவை இந்திய ரூபாய் 8.5 இலட்சம் மதிப்புள்ளவை.

 

ஜூன் 21, 2013
ஷீரடியில் புது தில்லியைச் சேர்ந்த தொழில் வல்லுநர் ஒருவர் இந்திய ரூபாய் 16.28 இலட்சம் மதிப்புடைய, 51 தங்கக் காசுகளால் கட்டப்பட்ட, 521 கிராம் எடையுள்ள தங்கக்காசு மாலையை பாபாவுக்குக் காணிக்கையாக்கினார்.




ஜூலை 20, 2013
ஹைதராபாத்தைச் சேர்ந்த சாயி பக்தர் ஒருவர் தம் தாயாரின் நினைவாக இரண்டு தங்கக் குத்துவிளக்குகளைக் காணிக்கையாக அளித்தார். ஒரு அடி உயரமுள்ள அவை தலா 987.400 கிராம்கள் எடையோடு ரூ.24.26 இலட்சம் மதிப்புள்ளவை ஆகும்.



ஓம் ஸ்ரீ சாயிநாத் மஹராஜ்கி ஜெய்.




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.