Total Pageviews

Friday, November 21, 2014

Sai Haiku

சாயி ஹைக்கூ (கவிதை)


குளிர்ச்சி நிழலில் 
அமர்ந்த சூரியன் 
வேப்ப மரத்தடியில் 
தியானத்தில் பாபா 

Punch!

******** 'பஞ்ச்' *********





     எவ்வளவு படிச்சாலும் ஏறாத ஞானத்தை 
     அவ்வளவு எளிமையா அளிப்பது சாயிபக்தி! 

Tuesday, October 28, 2014

Baba's Dress - part 8

சாயிபாபாவின் உடை - பகுதி 8   


ன்பர்களே, சாயிபாபாவின் உடை பற்றிய பல்வேறு விஷயங்களை இத் தொடரிலே நாம் பார்த்து வருகிறோம். இவற்றில் நாம் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது திரு. H.S. தீட்சித் அவர்களைப் பற்றியே. இவர் கட்டிய தீட்சித் வாடா கட்டிடத்திற்கு அருகில்தான் தீட்சித் வாடா மியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில்தான் நாம் பாபாவின் கப்னி உடையினை இன்றுகூட கண்டுகளிக்க முடிகிறது. இவர் போன்ற பக்தர்களினால்தான் நமது காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் மக்கள் பாபாவின் சொந்த உடைமைகளை கண்ணால் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் வளாகத்தின் நடுவே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் பாபாவின் மிக அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள், உடை, காலணிகள், கிராமபோன் ஒலித்தட்டுகள், சிலிம் புகைபிடிக் குழாய், தண்ணீர் டம்ளர்கள், குளிக்கும்போது அமரும் கல், சமையல் பாத்திரங்கள் போன்றவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

காகா என்றழைக்கப்பட்ட திரு. ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்களின் பிற பெயர்கள் காகா தீட்சித், காகா சாஹேப் தீக்ஷித், தீக்ஷித் போன்றவை ஆகும். அவர் 1864-இல் கந்த்வாவில் பிறந்தார். மும்பை உட்பட பல்வேறு இடங்களில் படித்து சட்டப்படிப்பில் தேறினார். வழக்கறிஞர் ஆகவும் பணியாற்றி புகழ் பெற்றார். அரசியலில் சட்ட மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கட் தொண்டாற்றினார். 


திரு.காகாவும், திரு.நானா சாஹேப் சந்தோர்க்கர் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்களாவர். 1906-இல் காகா இலண்டன் மாநகரத்தில் ஒரு நாள் இரயில் வண்டியில் ஏறும் போது கால் தவறி நடை மேடையில் விழுந்து விட்டார். கால் காயம்பட்டு நொண்டி நடக்க ஆரம்பித்தார். உள்காயம் பலமாக இருந்ததால் நரம்பு சுளுக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் அவரால் நேராக நடக்க இயலவில்லை. இலண்டனில் சிறந்த மருத்துவ சிகிச்சைகள் பல எடுத்தும் அவரால் குணமடைந்து நேராக நடக்க முடியவில்லை. பிறகு 1909-இல் லோனாவாலாவிற்கு விடுமுறைக்காக சென்ற காகா தீட்சித் தனது பங்களாவில் தங்கினார். அங்கு தனது வகுப்புத் தோழனான நானா சாஹேப்பைச் சந்தித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு நானா சாஹேப் அரசாங்க உத்தியோகத்திலும் காகா சாஹேப் தனது சொந்த வக்கீல் தொழிலிலும் பணி புரிந்தனர். லோனாவாலாவில் அவர்கள் சந்தித்த பின் பல வருடங்களுக்குப் பிறகு நானாவின் அறிவுரைப் படி தீட்சித் ஷீரடிக்குச் செல்ல விரும்பினார். அப்போது காகா தனது மற்றொரு நண்பர் திரு.மிரீகர் உடன் அஹ்மத் நகரில் தங்கி இருந்தார். அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது மாமியாரைப் பார்க்க திரு.ஷாமாவும் அஹ்மத் நகர் வந்திருந்தார். இதை அறிந்த மிரீகர், ஷாமாவின் மூலம் திரு.காகா ஷீரடி செல்ல ஏற்பாடு செய்தார்.

திரு.ஷாமாவுடன் திரு.காகா ரயில் நிலையம் அடைந்தபோது ரயிலில் பயணிக்க இடம் இல்லாத நிலையில் தனக்குத் தெரிந்த அதிகாரியின் உதவியால் முதல் வகுப்பில் இடம் பெற்றுப் பயணம் செய்ய ஆரம்பித்தார், காகா. அவர்கள் இருவரும் கோபர்காவன் சென்றடைந்தபின் நானாவைச் சந்தித்தனர். பின்பு மூவரும் ஷீரடி போய்ச் சேர்ந்தனர். முதன் முறையாக 02-11-1909 அன்று காகா ஷீரடிக்கு வந்து பாபாவின் தரிசனம் பெற்று பெருமகிழ்வடைந்தார். காகாவின் வருகைக்காக தாம் காத்திருந்ததாகவும் அவரை அழைத்துவரவே ஷாமாவை- தான் அனுப்பி இருந்ததாகவும் சாயிபாபா அவரிடம் கூறினார்.

ஷீரடி, லோனாவாலா, மற்றும் மும்பையில் உள்ள விலே பார்லே ஆகிய இடங்களில் இருந்த தனது வீடுகளுக்கு காகா தீட்சித், தமது நண்பர்களை மட்டுமல்ல, முன்பின் தெரியாத வழிப்போக்கர்களைக் கூட இலவசமாக உணவருந்த அழைத்த வண்ணம் இருந்தார். இதன் விளைவாக காகாவின் லோனாவாலா வீடு "அன்னதான ஹிந்து ஹோட்டல்" என்றழைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு இருந்த ஹோட்டல்களின் வியாபாரம் தொடர முடியவில்லை. பாபாவின் உண்மை பக்தரான காகா, தமது விலே பார்லே வீட்டிலும் கூட பாபாவின் அடியொற்றி அன்ன தானம் செய்து, பூனைகள்-நாய்களுக்கும் கூட தடையேதுமின்றி பெருந்தன்மையுடன் தொடர்ந்து உணவளித்து வந்தார். ஷீரடியில் வசிப்பதற்கு கட்டிடங்கள் கட்ட 09-12-1909 அன்று பாபாவிடம் அனுமதி பெற்றார், காகா. கட்டிட வேலைகளையும் உடனே தொடங்கினார். அந்தக் குடியிருப்புக் கட்டிடங்கள் 1911-இல் முழுமை பெற்றன. அன்று கட்டப்பெற்ற முதலாவது கட்டிடமான தீட்சித் வாடா-வின் பழைமையான புகைப்படம் கீழே:


பாபா நிகழ்த்திய அற்புதச் செயல்களை தீட்சித் தனது மராத்தி நாட்குறிப்பு நூலில் விரிவாக பதிவு செய்து உள்ளார். 1909 முதல் 1918 வரையிலும், 1918 முதல் 1926 வரையிலும் காகா அவர்கள் எழுதிய குறிப்புக்கள் "தீக்ஷித்தின் டயரிக் குறிப்புக்கள்" என நூலாகவே வெளி வந்துள்ளது. ஷீரடியில் தங்கி இருந்த சமயம் ஒரு நாள் பாபா தமது கப்னி உடையினைப் பிரசாதமாக காக்காவுக்கு அளித்திருந்தார். ராமநவமி அன்று திறக்கப் பட்ட தீட்சித் வாடா, குருஸ்தானுக்கு எதிரே அமைந்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் ஓர் எளிமையான அறையில் தங்கி இருந்த காகா தீட்சித், மற்ற எல்லா இடத்தையும் ஷீரடி வரும் பக்தர்கள் இளைப்பாறக் கொடுத்து விட்டார். இவ் வாடாவில் தினமும் பூஜைகள் நடக்கும். இதே வாடாவில்தான் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எழுதிய திரு. ஹேமத்பந்த் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் தங்கினார். 1990-ஆம் ஆண்டு வரை இக் கட்டிடம் 'போஜன் க்ரிஹா' அல்லது உணவுக்கூடமாக பயன்படுத்தப் பட்டது.                                                                    

இதன் சிறு பகுதி புத்தகங்களை படிக்கும் அறையாகவும், பிறகு பாபா பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய காட்சிக் கூடமாக (Museum Hall ) வும் பயன் படுத்தப் பட்டது. பூட்டிவாடாவில் பாபாவின் சமாதி அமைவதிலும், 1922-இல் சாயிபாபா சன்ஸ்தான் அமைப்பிலும், பெரும் பங்காற்றிய காகா அவர்கள் 1923-இல் "சாயி லீலா" மராத்திப் பத்திரிக்கையையும் தொடங்கினார். திரு. காகா சாஹேப் ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்கள் ஜூலை மாதம் 1926-இல் சாயி இறைவனடி சேர்ந்தார்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் சாயி பாபா அணிந்திருந்த அதே உடையினை ஷீரடி செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் கண்டுகளியுங்கள்.

(இத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

Saturday, October 11, 2014

Keerthan Sankeerthan - part 2

*கீர்த்தன்- சங்கீர்த்தன்* தொடர் - பகுதி 2



7. சங்கீர்த்தனத்தின் பிற பெயர்கள் யாவை?

பஜன், பஜனை, பக்தி சங்கீத குழு இசை, பக்தி கோஷ்டி கானம் என்று கூறலாம்.

8. சங்கீர்த்தனத்தில், வரலாற்றில் தலை சிறந்து விளங்கியவர்கள் யாவர்?

நாரத மாமுனிவர், தும்புரு கந்தர்வர், இராமபக்த ஹனுமார், பக்த ப்ரஹலாதர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், இதர நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷி சுகதேவர், மீராபாய், ஆண்டாள், அருணகிரிநாதர், கபீர்தாஸ், துளசிதாஸ், சுவாமி சிவானந்தர், கிருபானந்த வாரியார் சுவாமிகள், குருநானக், தாஸ்கணு மஹராஜ், தர்மபுரம் சுவாமிநாதன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள், பெங்களுரு ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், வீரமணி மற்றும் பலர்.

9. சங்கீர்த்தனத்திற்கு உதவும் இன்னிசைக் கருவிகள் என்னென்ன?

தோலக் (Dholak), உடுக்கை (Dumroo), கஞ்சிரா (Kanjeera), சலங்கை (Ghungroos), மிருதங்கம், தாள், கடம் (Ghatam), தபலா, கோல் (Khol), மஞ்சீரா அல்லது ஜால்ரா (Manjeera), பக்கவாஜ் (Pakhawaj), பன்சூரி (Bansuri), ஹார்மோனியம், வீணை, தம்புரா, புல்லாங்குழல், ஜலதரங்கம், சிதார்,சுருதிப் பெட்டி, மற்றும் முக்கியமாக கர்தால் (Kartal) அல்லது சாப்ளாக் கட்டை.

10. சங்கீர்த்தனத்திற்கு வேண்டிய தகுதிகள் யாவை?

உண்மை சாயிபக்தி, விசுவாசம், பொறுமை, முழுமையான ஈடுபாடு, நல் நம்பிக்கை, இசையில் ஆர்வம், குழு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சி.

11. எல்லோராலும் சங்கீர்த்தனம் செய்ய இயலுமா? இதற்கென தனி பயிற்சி, குரல் வளம், இசைக் கருவிகளில் திறன், சங்கீதப் பயிற்சி இவை வேண்டுமே ?

சங்கீர்த்தனம் அல்லது பஜனையின் சிறப்பம்சமே பொது மக்கள், பக்தர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எவ்வித கூச்சமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் பங்கு பெற முடிவதுதான். இதற்கு ஓரளவு குரல் வளம், எளிமையான பாடல்கள், பாட்டு புத்தகங்கள், கர்தால் போன்ற அடிப்படைக் கருவிகள் இவை இருந்தாலே போதுமானது. "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி" போன்ற மஹா மந்திரங்கள் மட்டும் கூட போதுமானது. இந்த சங்கீர்த்தனம் அல்லது அகண்ட நாம சங்கீர்த்தனத்தில் ஒலித்தட்டு போல ஒரே ராகத்தில் திரும்பத் திரும்ப பாடாமல், வெவ்வேறு விதமாய் முயற்சித்தால் சுவை கூடும். குழுவினரின் மனமும், ஒருமுகமாய் கவனம் சிதறாது உற்சாகமாய் இருக்கும்.

வியாழன் தோறும் வீடுகளிலோ, பக்தர்கள் கூடும் சாயி மந்திர் அல்லது கோவில் சத்சங்கங்களிலோ, பொது சபைகளிலோ, எளிமையான முறையில் திட்டமிட்டு யாவரும் செய்யலாம். ஓரளவு பாடத் தெரிந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லலாம். எந்த திறமையும் கூடுதலாக இல்லாவிடினும் சாப்ளாக் கட்டை, மஞ்சீரா போன்ற சிறிய கருவிகளை வைத்துக் கொண்டே கூட, குழுவாக ஒன்று கூடி இசைத்து இன்புற்று பாபாவின் அருள் பெற்று மகிழலாம்.

12. சங்கீர்த்தனத்தால் கிடைக்கும் இதர நன்மைகள் யாவை?

- கவலைகள் மறந்து போகுதல் (Forgetting the Worries)
- மனதிற்கு ஓர் மாற்றமும், புத்துணர்ச்சியும் (Relaxation and Change)
- ஆண் பெண் இளைஞர், சிறுவர், சிறுமியர்க்கு நற்பழக்கம், மென் திறன்- சமுதாய திறன்கள் வெளிப்பாடு மற்றும் திறன் மேம்பாடு, மன ஓர்மை கிடைத்தல் (Good habits-Soft skills-People skills-Social skills development)
- குழு ஒற்றுமை உணர்வு (Team cohesiveness)
- உள்ளங்கைகள் அழுந்த கைதட்டிக் கொண்டே பாடுவதால் அல்லது ஆடுவதால் வர்மப் புள்ளிகள் நன்கு இயங்கப் பெற்று ஆரோக்கியம் அடைதல்
- ஆத்மார்த்தமான சங்கீர்த்தனத்தால் ஆக்க பூர்வமாக நேரம் செலவாவது (Creative Satisfaction and Entertainment)
- இதர சாயி பந்து ('Bha'nthu)க்களை அதாவது நம் சாயி சொந்தங்களைச்  சந்தித்து உரையாடும் வாய்ப்பு
- ஜாதி, பால், இனம், மதம், மொழி, துவேஷங்கள், வேறுபாடுகள் ஏதும் இல்லாமல் நட்பு உணர்வும் ஒற்றுமையும் ஏற்படுதல் (Unity and Harmony)
- உச்ச ஸ்தாயியில் (உரத்த குரலில்) கூட்டத்துடன் ஒன்றிணைந்து பாடும்போது நேரம், காலம், மனக் கவலை, துன்பம், வருத்தம், துயரம், பதட்டம், பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் சிறிது நேரமேனும் விடுபட்டு வழிபாட்டின் உன்னத நிலையைத் தொட முடிவது
- பஜனை முடிந்தபின் மனம் லேசாக, மனப் பளு அல்லது மன அழுத்தம் குறைய வாய்ப்பு
- ஆர்வமுடைய நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உற்றார், ஊர்மக்கள், முதியோர் என அனைவரும் பங்கு பெறும் வகையில் இம் முறை இருப்பது
- சாயி பந்துக்கள் அவ்வப்போது சந்திக்கும் வேளையில் அரசியல்- வம்பு-வேடிக்கை-விவாதப் பேச்சிற்கு இடமின்றி சாயிபாபாவைப் பற்றியோ, சொந்த பிரச்சினைகளைப் பற்றியோ (பஜனை முடிந்த பின் அல்லது வேறு நேரத்தில் மட்டும்) பிறரிடம் கலந்தாலோசித்து தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும்கூட வாய்ப்பாக அமையலாம்.
- எல்லாவற்றுக்கும் மேலாக சாயி நாம சங்கீர்த்தனமும், சாயி பெயரை உச்சரித்து நாம ஜெபமும் செய்வதே ஒரு பெரும் பாக்கியமாகும் (Real devotion, dedication, singing the glory of god, celebrating in a joyful way) அதன் பயன்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவத்தால் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

(தொடரும்)










(Videos Courtesy: kvnvasu)

Thursday, October 2, 2014

Videos

ஒளிக்காட்சிகள் 
(Videos By: rOhiT BeHaL, Ramesh G, V Nookala, India TV)

ஷீரடியில் பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் 


மும்பையிலிருந்து 45 நிமிடங்களில் ஷீரடி சென்றடைய கடல் விமான சேவை !


மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவில் ஷீரடி சாயிபாபா ஆலய பிரதிஷ்டை 


ஷீரடி சாயிபாபா பூஜை, குவைத் 


அமெரிக்காவின் மசாசூசெட்ஸ், பில்லெரிகா சாயி கோவில் 

Wednesday, September 24, 2014

Sai Bakti videos

ஒளிக்காட்சிகள் 
(Videos by: dbnagu, Suriyan Tv, Shirdi saibaba, Ram Subrahmanian)

நாகப்பட்டினம் ஷீரடி சாயி கோவில் கும்பாபிஷேகம் 







நெற்குன்றம் ஸ்ரீ இலக்ஷ்மி சாயிபாபா கோவில் கும்பாபிஷேகம் 



இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் சாயிபாபா திருக்கோவில் 



கனடா மிசிசாகா சாயிபாபா ஆலய கும்பாபிஷேக ப்ராணப் பிரதிஷ்டை 

Wednesday, September 17, 2014

Punch!

******** 'பஞ்ச்' *********



" மயங்கிய கணவனுக்கு மனைவி சொல்லே மந்திரம் 
   மதிநுட்பம் உள்ளவனுக்கு பாபா சொல்தான் மந்திரம் "

Tuesday, September 16, 2014

Bakthi Songs

பக்தி கீதங்கள் 

வழங்கியோர்: Emusic Abirami





சாயி ஓம்.

Tuesday, September 9, 2014

Lotus feet

ஸ்ரீ சாயிராம்  மலர் பாதம் 

வழங்கியோர்: SHARP VIDEO








Audio Visuals

ஒலி -ஒளிக்காட்சிகள் 




(Courtesy: Shreedhar Pant, devotionaltamilsongs, Sai Aashirwad)

Rare Pictures

காண்பதற்கு அரிய படங்கள் 


ஷீரடி சாயி சமாதி மந்திர் - மிகப் பழைய படம்

பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் ஷீரடி கிராமத்தில் சாவடி (இடது)  புத்தகம் படித்துக் கொண்டு இருக்கும் பாபா ! (வலது) 

Thursday, August 21, 2014

Keerthan Sankeerthan

    *கீர்த்தன்- சங்கீர்த்தன்* - புதிய தொடர் - பகுதி 1  



             ந்து கலாச்சார வழிபாட்டில் நவ (ஒன்பது) வித பக்தி  வழிமுறைகள் உண்டு. இந்த ஒன்பது வழிமுறைகளில் ஒன்றான 'கீர்த்தனம்' என்பது இக்கலியுகத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஷீரடி சாயி பாபாவின் பக்தி வழிபாட்டில் 'சங்கீர்த்தனம்' என்பது ஓர் இன்றியமையாத பங்கினை கொண்டுள்ளது. ஏழை எளிய மக்களை எளிதில் சென்றடைவது. 

பக்தர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட்டி ஜாதி, மத, இன,பால், வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமை உணர்வுடன்  பக்தி உணர்ச்சிப் பெருக்கில் திளைக்க வைப்பதால்தான் இக் கீர்த்தனம் - சபரிமலை ஐயப்ப வழிபாடு, ஹரே கிருஷ்ணா வழிபாடு, பழனி முருகன் வழிபாடு போன்றவற்றில் பல்லாண்டுகளாக சிறந்த இடம் பெற்றுள்ளது. இக்கால இளைஞர்களுக்கு எழும் பல விதமான கேள்விகளும் பதில்களும் இத் தொடரில் இனி இடம் பெறும். கீர்த்தன் மற்றும் சங்கீர்த்தன் பற்றி சாயி மார்க்க மக்கள் தொண்டில் முன்னோடியும், கர்மயோகியும், தவச் சான்றோருமான புட்டபர்த்தி சித்தர் ஸ்ரீ சத்தியசாயி பாபா அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார். இவரது விளக்கங்கள் கேள்வி-பதில் வடிவில் வலைப்பூ வாசகர்களுக்காக:


1. 'கீர்த்தன்' என்றால் என்ன?
கீர்த்தன் என்பது கடவுளின் புகழை பிறருக்கு நன்கு கேட்கும்படி (இசைக் கருவிகளோடு) பாடலாக பாடுவது ஆகும்.

2. 'சங்கீர்த்தன்' என்றால் என்ன?
சங்கீர்த்தனம் என்பது வெறும் உதட்டசைவிலோ, நாக்கை அசைத்தோ பாடுவது அல்ல. அது இதயத்தில் இருந்து, இதயசுத்தியுடன், உணர்வுபூர்வமாக பாடுவதாகும். கடவுளின் பெருமையை, புகழை நினைக்கும்போது ஏற்படும் இனிமையில் திளைத்து எழுப்பும் இதயப் பேரொலி அது. கேட்பவருக்கும், பாடுபவருக்கும் சிலிர்ப்பு உணர்ச்சியைத் தருவது. பாடுபவர் கேட்பவரின் பாராட்டுரையையோ, புகழ்ச்சியையோ எதிர்பார்க்க மாட்டார். பிறர் தரும் பாராட்டுக்கோ, குறை கூறும் பேச்சிலோ கவனம் செலுத்தாது, தானாகத் தோன்றும் பரவச நிலையின் வெளிப்பாடுதான் அது. ஒருவரின் சுய திருப்திக்காகவும், சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவதே சங்கீர்த்தனம் ஆகும். (சங்கீர்த்தன் என்பதை வட இந்தியாவில் 'பஜன்' என்றும், தென் இந்தியாவில் 'பஜனை' என்றும் கூறுவர். பக்தி சங்கீதக் குழு சேர்ந்திசை என்றும் கூறலாம்)


'தாள்' இசைக்கருவியுடன் ஸ்ரீசத்யசாயி பாபா 
3. சங்கீர்த்தனம் செய்வது எதற்காக?
உயர்ந்த வகை கீர்த்தனமான சங்கீர்த்தனம் என்பது கடவுள் அருளைப் பெற பெரும் ஏக்கத்துடன் போற்றிப் பாடும் அனுபவமாகும். இது நிகழும் சுற்றுப்புற சூழ்நிலையையே சுத்திகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. இன்று மனிதன் வன்முறை,வெறுப்பு, கொடுமை மற்றும் தீய அவக்கேட்டினைக் குறிக்கக்கூடிய சப்தங்களால் சீர்கேடடைந்த காற்றினைச் சுவாசிக்குமாறு கட்டாயப் படுத்தப்பட்டுள்ளான். இதனால் தன்னுள்ளே பெரும் முயற்சி செய்து அடையப் பெற்ற அருட் பேறுகளை மிக விரைவாக இழந்து வருகிறான். இந்நிலையில் சங்கீர்த்தனம்- இறைவனின் புகழைப் போற்றிப் பாடும்போது ஏற்படும் அதிர்வலைகள் வளிமண்டலத்தைத் தூய்மையாக்கி, சாந்தப்படுத்தி, உயர்வாக அளிக்கும். மேலும் ஈத்தர் எனப்படும் தூய வெளியிலே இந்த அதிர்வலைகள் ஊடுருவிக் கலந்து பரவி நிரந்தரமாக இருக்கும். இம் மந்திர ஒலிகளை ஒதிவிடும் மனிதர்களின் குறிப்பிட்ட கால எல்லைக்கப்பாலும் நீடித்து இருக்கும். இத்தகைய காற்றினை சுவாசிக்கும் இதயமும் சுத்தமாகும்.

4. நாமசங்கீர்த்தனம் என்றால் என்ன?
கடவுளின் பெயரைப் பலமுறை தொடர்ந்து கூறி சங்கீர்த்தனம் செய்வதே நாமசங்கீர்த்தனம் ஆகும்.

5. அகண்ட பஜன் என்றால் என்ன?
பொதுவாக 24 மணி நேரமோ, ஏழு நாட்களோ, தொடர்ந்து இடைவிடாது சங்கீர்த்தனம் செய்வதே அகண்ட பஜன் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைப் பருவம் முதல் இறுதிக்காலம் வரை உலக நன்மையையே கருத்தில் கொண்டு உரத்த குரலில் நம்பிக்கை மற்றும் உற்சாகத்தோடு பஜனை செய்வதுதான் அகண்ட பஜன் என்பது ஸ்ரீசத்யசாயி அவர்கள் கூறியதாகும்.

6. சங்கீர்த்தனத்தை எவ்வாறு செய்தல் வேண்டும்?
பல நூறு பக்தர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி பஜன்கள் பாடுவதில் சேர்ந்து கொள்ளும்போது அந்த தெய்வீக வழிமுறையில் தம்மைத் தாமே மெய்மறந்து முழுவதுமாக தன்னை ஈடுபடுத்தி ஈர்த்துக் கொள்ளப்பட வேண்டும். சங்கீர்த்தனத்தை வெறுமனே பொழுதுபோக்கு போல கருதக்கூடாது. மெதுவாக சோம்பலுடன் எழுச்சியற்ற வகையில் பாடுதல் கூடாது. ஆத்மார்த்தமாக (உணர்வுபூர்வமாக) துடிப்புடன் பாடவேண்டும். சங்கீர்த்தனம் என்பது பா(bha)வம்-ராகம்-தாளம் (Feeling-Melody-Rhythm)அதாவது உணர்ச்சி-பண்ணிசைவு- ஒழுங்கான ஓசைக் கூறு முதலியவற்றை ஒருங்கே இணைத்து இசைத்து பாடுதல் வேண்டும். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து குழுவாக-ஒரே நேரத்தில்-ஒரே மெட்டில்- ஒரே உணர்ச்சியுடன் பாடும்போது தெய்வீகத்தினை அனுபவிக்கலாம். எண்ணம்-சொல்-செயல் இம்மூன்றில் தூய்மையோடு பாடுதல் வேண்டும். நாக்கால் உச்சரிக்கும் சொல்லை மனத்தால் எண்ணிக் கொண்டு கைகளால் தட்டிக் கொண்டு செய்யும் சங்கீர்த்தனம் நமது எண்ணம்-சொல்-செயலை ஒருமுகப் படுத்தி, இதயத்தைத் தூய்மை படுத்தி இறைபக்தியினை பேணி வளர்க்கின்றது.

பக்தர்கள் அனைவரும் சேர்ந்து இசைக்கும் சங்கீர்த்தன நிகழ்ச்சி எளிமையாக, எல்லோரும் பங்குபெறும் வகையில் இருத்தல் வேண்டும். பாடல் மெட்டும், தாளமும் எளிதாக எல்லோராலும் பின்பற்றக் கூடியதாக அமைக்க வேண்டும். கீர்த்தனை என்பதில் பாடுபவரின் வல்லமைக்கே முக்கியத்துவம் இருக்கும். பஜனை சங்கீர்த்தனத்தில் எல்லோருடைய பொதுவான திறனை மனதில் கொண்டு வடிவமைத்தல் வேண்டும். எல்லோருக்கும் தெரியாத, நன்கு பிரபலமாகாத பாடலை தலைமைப் பாடகர் பாடினால் குழுவில் அமர்ந்துள்ள பக்தர்களிடமிருந்து ஏற்புத் தன்மையும் குறைவாக இருக்கும். குழுமியுள்ள சக பக்தர்களிடமிருந்து உற்சாகமோ, உண்மையான பங்கேற்றலோ இருக்காது. அவர்களது கவனமும் சிதறும். தனெக்கென தனி பாணியில் தன்னிச்சையாக பாடிக் கொண்டிருப்பவர்கள் குழு இசையான பஜனைக்கு ஏற்றவர்களாக மாட்டார்கள். மேலும் சமூக சங்கீர்த்தனத்தில் ராக ஆலாபனை அதாவது விளக்கமான பண்ணிசைப்பு என்பதற்கே இடமில்லை(கீர்த்தனை செய்வோருக்கே அது பொருந்தும்). கடவுள் பெயர் மற்றும் ஒலி உச்சரிப்பிற்கே முக்கிய இடமுண்டு.  இவைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் சேர்ந்திசைத்து - அனைவரும் ஒன்றாக கலந்து கொள்ளும்போது சந்தோஷமும், நல்லிணக்கமும் ஏற்படும்.

மேலும் பல ஆய்வுகளின் மூலம் இனி வரும் பகுதிகளில் 'கீர்த்தன்-சங்கீர்த்தன்' கேள்வி பதில்கள் வடிவில் தொகுத்து அளிக்கப்படும்.
(தொடரும்)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி 

Saturday, August 9, 2014

Meditation Music

சாயி தியானம் 

சாயி தியானத்திற்கு உதவும் இசைக் கோப்புகள் 
(பதிவேற்றியோர்: Dr. Nipun Aggarwal, Saikabeta Dwarakamayee, Sai Aashirwad)



சாயி ஓம்.

Thursday, July 24, 2014

Tough time?

வாழ்வில் சோதனையா?




கொளுத்தும் வெயிலில் குடை யில்லாமல் 
குன்றா ஊக்கத்துடன் பூமியைக் குடைந்து 
புவிஅறி வியல்அறிஞர், உழைப்பாளிகள் 
பூரிப்புடன் தோண்டி எடுக்கும் 
தாதுப் பொருளோ கரிக் கட்டிபோல 

அந்த தங்கச் சுரங்கத்தில் கிட்டிய பொருளை 
அதிசக்தி உலையில் இரண்டாயி ரத்துநூறு 
பாரன்ஹீட் வெப்பத்திலே, கொடுந்தீயிலே 
கொதிக்க வைத்து உருக்கிய பின்தான் 
தங்கக் கட்டி உருவாகி ஜொலிக்கும்.  

கடவுள் சோதிக்கிறார் என்று கடுமையாக 
பேசிக்கடுஞ் சினம் கவலை கொள்ளாதே
பொருளை வாங்க விலைதர வேண்டும்  
செயலைச் சாதிக்க வலிமை வேண்டும் 
வலிமை வளர்க்க பயிற்சி வேண்டும் 
பயிற்சி என்றால் துன்பம் இருக்கும் 

துன்பம் சகிக்க பொறுமை வேண்டும் 
பொறுமை நீடிக்க நம்பிக்கை வேண்டும். 
வேதனை முகத்தோடு வேண்டும் உனக்கு 
வேண்டு மென்றே பாரா முகத்துடன் 
பின்முதுகு காட்டவில்லை பாபா 

உன் பாதையின் முன்னே வேகமாய் ஓடிவரும் 
தீமை ஓநாய்களை அடித்து விரட்ட 
நேர்முகமாய் நிற்கிறார்  வீரசாயி பாபா 
தன்சத்திய வாக்கினை நித்தியமும் நிரூபித்து. 

உன்னை நம்பி உண்மையாய் உழைத்திடு
சாயி.. சாயி..  என்றே ஜெபித்திடு
சாயியை நம்பிநீ சாந்தமாய் உறங்கிடு  
இருள் நீங்கி பேரொளி படரும் வேளை 
சத்தியமாய்ச் சூரியன் உதிக்கும் சுபவேளை   
இதோ இன்னும் சிறிது நேரத்தில்.  

சாயி சாயி சாயி   சாயி சாயி சாயி    சாயி சாயி சாயி       



 
     
     
      
   



(வரைகலை ஆக்கம் : ரோஹித் பெஹல்)

Sunday, July 13, 2014

Baba's Dress - part 7

சாயிபாபாவின் உடை - பகுதி 7                    


  திரு கேஷவ் அவர்கள் ஏப்ரல் 28, 1906-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அர்னாலா மீன்பிடி கிராமத்தில் பிறந்தார். கேஷவிற்கு ஏழு வயதிருக்கும் போது இதயத்தில் கடும் வலி கண்டு சுரம் வியாதியுடன் இருந்தார். அந்நாட்களில் அறுவைச் சிகிச்சை தவிர எந்த வியாதிக்கும் அதிக மருந்துகள் கிடையாது. கேஷவ் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான யெஷ்வந்த்ராவ் கல்வான்கர், ஒரு சிறந்த சாயி பக்தர். அவர் கேஷவ்வின் குடும்பத்தாருக்கு தக்க அறிவுரை வழங்கி ஷீரடி சாயிபாபாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து, பாபாவின் லீலைகளை (அவர் நிகழ்த்தும் அதிசய நிகழ்ச்சிகளை) எதிர்பார்த்து இருக்கும்படியும் கூறினார். 


கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய் அவர்கள் கேஷவ் குணமடைந்து விட்டால் ஷீரடிக்குச் சென்று ஒரு பாக்கெட் இனிப்பு பேடாக்கள் சாயிபாபாவுக்கு நேர்த்திக் கடனாக அளிப்பதாக' வேண்டிக் கொண்டார். மறுநாளே அதிசயத்தக்க விதத்தில் கேஷவ் பூரண குணம் அடைந்து படிப்பைத் தொடர, தனது மராத்திப் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 95 வருடங்களுக்கு முன்னால், ஜனவரி மாதம் 1918 அன்று, திரு. கேஷவ்வின் குடும்பம் ஷீரடிக்குப் புறப்பட்டது. கேஷவ்வின் அத்தை திருமதி. தாமாபாய்  ஏற்கனவே வேண்டிக் கொண்டபடி, இனிப்பு பேடாக்களை சாயிபாபாவுக்குக் காணிக்கையாக்கினார். பாபா அந்த இனிப்புப் பெட்டியிலிருந்து ஆறு பேடாக்களை எடுத்து, கேஷவ்விற்கு அளித்தார். பின்பு மீதி அனைத்தையும் வைத்துக் கொண்டு பாபா உண்ண ஆரம்பித்தார். ஷாமா என்கிற மாதவராவ் தேஷ்பாண்டே அப்போது நகைச்சுவையாக, பாபா தான் மட்டுமே சுயநலமாக உண்பதாக விமர்சித்தார். திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த தாமாபாயைப் பார்த்தபடி பாபா வேடிக்கையாக இவ்வாறு கூறினார். "தாமாபாய் ஐந்து வருடங்களாக என்னை பட்டினியாக இருக்குமாறு செய்து விட்டாள்" என்று கூறியபடியே அந்த இனிப்புக்களை உண்ண ஆரம்பித்தார்.


டாக்டர் கேஷவ் எழுதிய நூலின் அழகிய முகப்பு அட்டை 

பின்பு 12 வயதுச் சிறுவனான கேஷவ்வை அருகில் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்த பாபா அவனுக்குத் தான் அணிந்திருந்த கப்னி உடையையே கழற்றி பரிசாக அளித்தார். அந்த சிறுவன்தான் பிற்காலத்தில் மும்பையில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கிய டாக்டர் கேஷவ் பகவந்த் கவான்கர் ஆவார். பாபா வழங்கிய அந்த வெண்ணிற பருத்தி உடை காலஞ்செல்லச் செல்ல மஞ்சள் நிறமாக பழுப்பேறி விட்டது. டாக்டர் கேஷவ்வின் குடும்பத்தினர், 1993 -ஆம் ஆண்டு வரை மிகப் பாதுகாப்பாக மரப் பெட்டியில் வைத்துப் பாதுகாத்தனர். பின்பு அதை வெளியே எடுத்த டாக்டர் கேஷவ், மரச்சட்டம் பதித்த கண்ணாடி அலமாரியில் பக்தர்கள் பார்ப்பதற்கு வசதியாக கப்னியைத் தொங்கவிட்டு காட்சிப் படுத்தினார். திரு.கேஷவ்வின் குடும்பத்தினர், மிகவும் நைந்து போன அவ்வுடையினை பராமரிப்பதற்கு ஒவ்வொரு வருடமும், தசரா தினத்தன்றும், சில மணி நேரங்கள் ஜாக்கிரதையாக வெளியே எடுத்து சுத்தம் செய்வார்கள். அப்போது எவரும் அதைத் தொட அனுமதிப்பதில்லை. பாபாவின் சில நூறு பக்தர்கள் மட்டுமே கேஷவ்வுக்கு பாபா அளித்த பரிசினைப் பற்றி தெரிந்திருந்து அதை நேரில் காணும் பாக்கியம் பெற்றார்கள் என கேஷவ் அவர்களின் புதல்வர் தெரிவித்துள்ளார். 

பாபா சமாதியடைந்து பல வருடங்கள் கழிந்த பின், அப்பாசாஹிப் என்று அன்போடு அழைக்கப்பட்ட டாக்டர் கேஷவ் அவர்களின் தொடர்ந்த வேண்டுதலுக்குச் செவி சாய்த்து அருளினார் சாயிபாபா. தனது பக்தனின் மேல் உள்ள பேரன்பினை உறுதிப் படுத்த கேஷவ்வின் வீட்டிலேயே ஒரு நாள் தோன்றினார் பாபா. ஆம்! ஜனவரி 18, 1954 அன்று, பாபா சமாதியடைந்து பல வருடங்கள் கழிந்த பின் தங்கள் இந்திரா நிவாஸ் வீட்டிற்கு பாபா வந்ததாகவும், தனது தந்தை டாக்டர் கேஷவ்வுடன் பாபா சில மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்ததாகவும் கேஷவ் அவர்களின் புதல்வர் டாக்டர் சாயிநாத் கவான்கர் மெய்சிலிர்ப்புடன் தெரிவித்துள்ளார். "அப்போது எனக்கு ஐந்து வயதுதான் இருக்கும். ஆனாலும் அந்த நிகழ்ச்சியை மனதில் ஞாபகப்படுத்த முடிகிறது. எங்கள் குடும்பத்தினர் இன்னும் நினைவில் வைத்துள்ளனர். இரவு நேரம்... வீட்டினுள் பாபா வந்து உட்கார்ந்து இருந்ததை மிகத் தெளிவாகக் கண்ணால் நானும் என் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் கண்டோம். இரவு 10.30 முதல் காலை 8.30 வரை வீட்டின் வராந்தாவில் அவர்கள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். எனது தந்தையும் பாபாவும், மணிக்கணக்கில் நீண்ட உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள்" என்று சாயிநாத் கவான்கர் கூறினார். இந்த சம்பவம் நடந்து 59 வருடங்கள் கழித்து வீட்டின் அந்த இடத்தைச் சுட்டிக் காட்டி ஒரு பேட்டியில் திரு. கவான்கர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின்னர், ஒரு நாள் டாக்டர் கேஷவ் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சமயம் மென்மையான ஒரு குரலைக் கேட்டார். "எழுந்து கொள், வந்து என்னைப் பற்றிய கதைகளை எழுது" என்று அக்குரல் கூறியதைக் கேட்டார். தூக்கக் கலக்கத்துடன் சடாரென எழுந்த டாக்டர் கேஷவ், அது பாபாவின் குரலே என்று உணர்ந்து, பிரார்த்தனை செய்தபின் உடனே கையில் பேனாவுடன், ஒரு நோட்டுப் புத்தகத்தில் தீவிரமாக எழுதத் தொடங்கினார்.
                                               
கப்னி உடையில் பாபா - அரிய படம் 

இரவு 1.30 முதல் காலை 10 மணி வரை தொடர்ச்சியாக பல அத்தியாயங்களை எழுதி முடித்தார். அவைதான் பின்னாளில் 'ஷீரடிச்சே சாயிபாபா' என்கிற நூலாக வெளிவந்து மராத்தி மொழிப் புத்தக விற்பனையில் சாதனை படைத்தது. பிற மொழி பக்தர்களும் பயன்பெறும் வகையில் திரு. கவான்கர் 2011 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். சாயிபாபா வருகையினால் புனிதமடைந்த அப் பேறு பெற்ற வீட்டிலேயே ஜூன் 29, 1985 அன்று தமது 79-ஆம் வயதில் மும்பை குர்லாவில் டாக்டர் கேஷவ் கவான்கர் அவர்கள் அமைதியுடன் இறைவனடி சேர்ந்தார்கள்.

(தொடரும்)

Wednesday, June 25, 2014

Holy Neem Tree

ஷீரடியின் புனித வேப்ப மரம் 
(Thanks to: rOhiT BeHaL)


Sai Bakthi videos

வியப்புக்குரிய காட்சி !

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்திப் பேட்டை ஷீரடி சாயி பாபா கோவிலில் காலை (காகட்) ஆரத்தி நடைபெற்ற வேளையில் அந்த கோவில் உள்ளே இருந்த நாயும் பங்குபெறும் அதிசய நிகழ்வினை கீழே உள்ள ஒளிக்காட்சிப் பதிவினில் கண்டு மகிழலாம். ஆரத்தி முடித்த உடனேயே அமைதியாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.




அனைத்து உயிரிலும் பாபா 

(Videos by: Vamshisai Kirshna, rohit BeHaL)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி


Tuesday, June 17, 2014

Baba Punch

******** பாபா 'பஞ்ச்' *********

தமிழ் பொழுதுபோக்கு ஊடகங்களில் சில சமயம் வேடிக்கையாக கூறப்பட்டாலும், சில பஞ்ச் டையலாக்குகள் மனதில் பளிச்சென இடம் பிடிப்பவை, நம்பிக்கை, மகிழ்ச்சி, உற்சாகம், மற்றும் தைரியத்தை அளிப்பவை. நல்ல பல தத்துவங்களையும் கொண்டவை. அவற்றில் சில எளியோரின் எண்ணங்களை எளிதாக மேம்படுத்துபவை. சாயி பக்திச் செல்வர்களே, இப் புதிய பகுதியில் தமிழ் இளைஞர்கள் எப்போதும் விரும்பும் 'பஞ்ச்' டையலாக்குகள் போன்ற வசனங்கள் அவ்வப்போது வெளியாகும்!

" உடம்புக்கு வைத்தியம் பார்க்க டாக்டர்கிட்ட போகணும் - அந்த 
  டாக்டருக்கே வைத்தியம்னா சாயிகிட்ட தான் போகணும் "

" நண்பா,
   தாயி சொல்லை மதிக்கணும் 
   சாயி சொன்னா கேட்கணும் "
                                                                                        (தொடரும்)

Thursday, June 12, 2014

Film based on Devotee Experiences

சாயி பக்தர்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சித்திரம்
இணையத்தில் வழங்கியோர்: Ultra Bhakti 



Wednesday, June 11, 2014

Tamil Movie

ஸ்ரீ ஷீரடி சாயி பாபா தமிழ் திரைப் படம் 
Upload By : Shubamasthu Thatasthu



Sai Bakthi Videos

சாயி பக்தி ஒளிக்காட்சிகள் 

ஸ்ரீ சாயி லீலை இசைத் தொகுப்பு 
வழங்கியோர்: Emusic Abirami 
பாடியவர்கள்: சைந்தவி, ராகுல் K ரவி



ஓம் சாயிராம் மந்திரம்
வழங்கியோர்: T-Series Bhakti .Channel
பாடியவர்: சரண் 



Monday, May 26, 2014

Dakshina

அளிக்க வேண்டிய தக்ஷிணை 


*அசைக்க முடியாத நம்பிக்கை 

*விடாமுயற்சியுடன் கூடிய பொறுமை 

*நன்றியுணர்வு - விசுவாசம் 

சாயிராம் சாயிராம் சாயிராம் 

Saturday, April 19, 2014

Saibaba Story

என் நெஞ்சில் வாழும் சாயிபாபா இசைத் தொகுப்பு 
பாபாவின் கதை 
வழங்கியவர்: சாந்தி சுரேஷ் 
தயாரிப்பு: SHARP VIDEO



சாய் ஓம்

Bhajans & Mantras Part-2

ஸ்ரீ ஷீரடி சாயிபாபா பஜனைப் பாடல்கள் மற்றும் மந்திரங்கள்  பகுதி-2

SM ப்ரோ ஆடியோ & லைட்டிங்ஸ் மலைசியா வெளியிட்டுள்ள ஷீரடி சாயி பாபா பக்திப் பாடல் தொகுப்பு 
(பாடியவர்கள்: நளினா தேவி,  சந்திரிகா, லெட்சுமணன்)



Award ஆடியோ இசைத் தொகுப்பு 
ஸ்ரீ சாயி சரணம் 
இசை: V. கிஷோர்குமார் 
பாடல்கள்: நாஞ்சில் ராஜன் மற்றும் காவியா 
பாடியவர்கள்: N. சுதர்சன், பத்மாவதி பாலாஜி, அனுஷியா, கோவை கமலா, இராமு)




KMI ஆடியோ இசைத் தொகுப்புகள் 
1. ஷிரிடி பாபா சரணம் 
பாடியவர்: பாருபள்ளி ரங்கநாத்



2. 108 சாய் மந்திரம் 
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் 



(Courtesy : Munesh S, sacredverses, KMI MUZIK)
சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் சாயிராம் 

Friday, April 11, 2014

Temple Videos

புதுக்கோட்டை சாயிபாபா ஆலயம் 

முகவரி:
ஸ்ரீ ஷீரடி சாயிபாபா திருக்கோவில்,
ஸ்ரீ சாயிபாபா சௌந்திரராஜன் அறக்கட்டளை,
வடக்கு நான்காம் வீதி, புதுக்கோட்டை,
தமிழ்நாடு, இந்தியா.                




ஆதம்பாக்கம் ஸ்ரீ நவசக்தி பாபா ஆலயம் 

முகவரி:
ஸ்ரீ நவசக்தி பாபா ஆலயம்,
28, மேட்டு காலனி தெரு,
ஆதம்பாக்கம், சென்னை -600 088.
இந்தியா.



ஓம் சாயி ஸ்ரீசாயி ஜெய ஜெய சாயி
 
(Courtesy : Srinivasan P, thambi prabakaran)