Total Pageviews

Friday, September 6, 2013

Free Cataract Surgery

ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை

திரு. சிவாஜி கோண்ட்கர்
கடந்த ஏப்ரல் 1 முதல் நான்காம் தேதி வரை ஷீரடியில் இலவச கண்புரை அறுவை சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த முகாமினை ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட், லகானுபாய் அம்ருத்ராய் கோண்ட்கர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ஷீரடி சாயிநாத் மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தன. 125 ஏழைகளுக்குத் தனது தாயின் நினைவாக, ஷீரடி முனிசிபாலிடியின் துணைத் தலைவர் திரு. சிவாஜி கோண்ட்கர் இந்த இலவச அறுவை சிகிச்சையை உபயமாக அளித்தார். இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகள், மருந்து, உணவு மற்றும் தங்குமிட செலவுகள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டார். இறந்த உறவினர் நினைவில், பிடிவாதமாக பழைய சடங்குகளைச் செய்வதைக் காட்டிலும் இதுபோல் ஏழைகளுக்குத் தொண்டு புரிவதையே தாம் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்தார்.

அங்கு வந்த அனைத்து ஏழை நோயாளிகளுக்கும் டாக்டர் சுனில் சொண்டாகே அறுவை சிகிச்சை செய்தார். இது போன்ற தொண்டு முகாம்களை நடத்திட பலரும் முன்வர வேண்டும் என்று டாக்டர் சுனில் கேட்டுக்கொண்டார். திரு. சிவாஜி கோண்ட்கர் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தமது தாயாரின் நினைவாக, ஷீரடி சாயிபாபா பள்ளியில் 10ஆவது மற்றும் 12 ஆவது வகுப்புகளில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த மாணாக்கருக்கு ரூபாய் ஒரு இலட்சம் மதிப்புள்ள கல்வி உதவித்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.


சிகிச்சைக்கு வந்திருந்த பெண்மணிகள்


(Video Courtesy: rOhiT BeHaL)

ஓம் ஆரோக்கியக்ஷேமதாய நமஹ:

(பக்தருக்கு ஆரோக்கியமும், நலமும் வழங்கி அருள்பவரே போற்றி)











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.