Total Pageviews

Thursday, September 19, 2013

Lendi Baug

லெண்டி பாக் - பூந்தோட்ம்

லெண்டி பாக் பூந்தோட்டத்தில் பாபா வளர்த்த வேப்ப மரம் மற்றும் போதி மரங்களுக்கிடையில் அவர் விளக்கேற்றிய இடத்தில் தொடர்ந்து பராமரிக்கப்படும் நந்தாதீப் விளக்கு - பழைய படம்




லெண்டி பாக் எனப்படும் அழகிய பூந்தோட்டம், ஷீரடியில் பாபாவின் உழைப்பினால் உருவான ஒன்றாகும். இப்பூந்தோட்டம் 'குருஸ்தான்' என்கிற புனித இடத்திலிருந்து சிறிது தூரத்தில் உள்ளது. புதர்ச்செடிகளும், குத்துச் செடிகளும் சூழ்ந்த இவ்விடத்தில்தான் பாபா உலாவுவது வழக்கம். அந்தக் காலத்தில் இங்கு ஓடிய கால்வாயின் பெயரால் இப்பூந்தோட்டத்தின் பெயர் 'லெண்டி' என ஏற்பட்டது. காலை மற்றும் நண்பகல் வேளையிலே இங்கு இருக்கும் வேப்ப மரத்தடியில்தான் சாயி பாபா இளைப்பாறுவது வழக்கம். இந்த வேப்ப மரத்தடியில் சிறு குழிதோண்டி பாபா மண்விளக்கு ஏற்றி வைப்பது வழக்கம். அதன் நினைவாக இப்போது இங்கு 'நந்தாதீப்' எனும் விளக்கினை தொடர்ந்து பராமரித்து வருகிறார்கள். 'தீப்க்ரிஹா' என்கிற மார்பிள் கல்லால் ஆன எண்கோண வடிவ விளக்கு மாடத்தினுள் ஓர் கண்ணாடி பெட்டிக்குள் நந்தாதீப் விளக்கு அணையாமல் இன்றும் எரிந்துகொண்டே இருக்கிறது. அரச மரம் அல்லது போதி மரத்துக்கும் - வேப்பமரத்துக்கும் இடையில்தான் நந்தாதீப் விளக்கு எரிந்துகொண்டு உள்ளது. இந்தப் பூந்தோட்டத்தை எப்போதும் பார்வையிடலாம் என்றாலும், ஜூன், ஜூலை, மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஷீரடியின் தட்பவெப்ப நிலை இனிமையாக இருக்கும். ஷீரடி- மன்மாடு மாநில நெடுஞ்சாலை அருகே லெண்டி பூந்தோட்டம் அமைந்துள்ளது.

 
Photo Courtesy: Doshi ashutosh, saileelas.org

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.