Total Pageviews

Friday, January 3, 2014

News

சாயிபக்திச் செய்திகள்

ஷீரடி ஸ்ரீ சாயி ப்ரசாதாலயாவில் உலகிலேயே மிகப் பெரிய சூரிய நீராவி அடுப்பு!

 

ஷீரடியில் தம் கையாலேயே உணவு சமைத்து மக்களுக்குப் பரிமாறிய சாயி பாபா சமாதியடைந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழிந்த பின் ஓர் அற்புத விஷயமாக, உலகிலேயே மிகப் பெரிய சூரிய நீராவி அடுப்பு நிறுவப்பெற்றுள்ளது. இந்த அடுப்பில் அமைந்துள்ள 73 சோலார் தட்டுக்கள் சூரிய ஒளியிலிருந்து சக்தியைப் பெற்று, ஷீரடிக்கு வருகின்ற மக்கள் -ஒரு நாளைக்கு சுமார் ஒரு இலட்சம் பக்தர்களுக்கு உணவு சமைக்க உதவுகிறது. இவற்றினால் நீரின் வெப்பநிலையை 650 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்த்தி, சமைக்க உதவும் நீராவியை உருவாக்க முடியும். சாயி சமஸ்தானத்தினால் 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி வியாழன் அன்று ரூபாய் 1.33 கோடி செலவில் ஷீரடியில் இந்த அடுப்பு நிறுவப் பட்டது. இதனை இந்தியாவின் புதிய, புதுப்பிக்கப்படத்தக்கச் சக்தித் துறை அமைச்சர் திரு. பாரூக் அப்துல்லா அவர்கள் தொடங்கி வைத்தார்.
(Youtube upload: Tv9Gujarat)




No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.