Total Pageviews

Monday, June 25, 2012

Lyrics - 5


                                                                                    
                                                                           ஜெய் சாயி

பாபா பாட்டு புஸ்தகம் 


இசைத்தொகுப்பின் பெயர்: பாபா புகழ் மாலை  
இசை வெளியீட்டு வருடம் : 2010                                                  

பாடியவர் : இசைஞானி இளையராஜா  
கவிஞர்: சங்கமேஷ்வர்  
இசை அமைப்பாளர்: இசைஞானி இளையராஜா
பாடலின் தலைப்பு: பூவாரம் சூட்டி ....


பூவாரம் சூட்டி புகழ்பாட எண்ணி பூப்பறிக்க வனம் ஏகினேன்
பூ மலர்ந்து உதிர்ந்து சருகாகும் என்று பறிக்காமல் அங்கே நின்றேன்
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
தேடி மனமென்னும் மலர்தன்னை கண்டு கொண்டேன்
கோடான கோடி  மனமென்னும் மலர்கள்
உனக்காக மலர்ந்தாடுது
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)

அடியார்கள் அரிதாக அவதரிக்கும் இம்மண்ணும்
அவதரித்த உனைப் போற்றுது
அவதி கொண்டோர் தமக்கு அவதாரமாய் வந்து
அரவணைக்கும் உனைப் பாடுது
அடியார்கள் அரிதாக அவதரிக்கும் இம்மண்ணும் 
அவதரித்த உனைப் போற்றுது 
அவதி கொண்டோர் தமக்கு அவதாரமாய் வந்து 
அரவணைக்கும் உனைப் பாடுது                                                    (குழுவினர்)

உந்தன் அழைப்பின்றியே எவரும் வரக்கூடுமோ
உந்தன் அழைப்பின்றியே எவரும் வரக்கூடுமோ  
அண்டி வருவோர்க்கு உந்தன் அதிசயமுண்டு
வணங்கும்முன் வறண்டிருந்த வாழ்க்கை வேறு
வணங்கியபின் வளம் பெருகும் வாழ்வு வேறு
கோடான கோடி  மனமென்னும் மலர்கள் 
உனக்காக மலர்ந்தாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)

கண்சிமிட்டும் விண்மீன்கள் உன் கோவில் மேல் நின்று
உனக்காகச் சுடர் வீசுது
கண் இமைக்க மறந்து இங்கு மின்மினிகள் வலம்வந்து
ஊர்வலங்கள் தான் நடத்துது
கண்சிமிட்டும் விண்மீன்கள் உன் கோவில் மேல் நின்று 
உனக்காகச் சுடர் வீசுது 
கண் இமைக்க மறந்து இங்கு மின்மினிகள் வலம்வந்து 
ஊர்வலங்கள் தான் நடத்துது 
வேத கோஷங்களும் கீத வாத்யங்களும்
வேத கோஷங்களும் கீத வாத்யங்களும் 
இங்கு ஓர் சுருதி ஓர் லயத்தில் உனைப் பாடுது
பக்தியுடன் வந்தால் உன் பார்வையுண்டு 
நம்பிக்கை கொண்டால் நல்வாழ்வும் உண்டு 

பூவாரம் சூட்டி புகழ்பாட எண்ணி பூப்பறிக்க வனம் ஏகினேன்
பூ மலர்ந்து உதிர்ந்து சருகாகும் என்று பறிக்காமல் அங்கே நின்றேன்
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
என்றும் வாடாத பூ இங்கு எதுதான் என்று 
தேடி மனமென்னும் மலர்தன்னை கண்டு கொண்டேன்
கோடான கோடி  மனமென்னும் மலர்கள் 
உனக்காக மலர்ந்தாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம் ..ஓம்....           (குழுவினர்)
சொல்லென்னும் மலரால் பாமாலை ஆக்கி 
இசையோடு புகழ் பாடுது 
ஓம் சாயி ஓம் சாயி ஓம் சாயி ஓம்சாயி ஓம்....                       (குழுவினர்)


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.