Total Pageviews

Tuesday, October 28, 2014

Baba's Dress - part 8

சாயிபாபாவின் உடை - பகுதி 8   


ன்பர்களே, சாயிபாபாவின் உடை பற்றிய பல்வேறு விஷயங்களை இத் தொடரிலே நாம் பார்த்து வருகிறோம். இவற்றில் நாம் மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது திரு. H.S. தீட்சித் அவர்களைப் பற்றியே. இவர் கட்டிய தீட்சித் வாடா கட்டிடத்திற்கு அருகில்தான் தீட்சித் வாடா மியூசியம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில்தான் நாம் பாபாவின் கப்னி உடையினை இன்றுகூட கண்டுகளிக்க முடிகிறது. இவர் போன்ற பக்தர்களினால்தான் நமது காலகட்டத்திலும் எதிர்காலத்திலும் மக்கள் பாபாவின் சொந்த உடைமைகளை கண்ணால் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஷீரடி சாயிபாபா சன்ஸ்தான் வளாகத்தின் நடுவே அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் பாபாவின் மிக அரிய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள், உடை, காலணிகள், கிராமபோன் ஒலித்தட்டுகள், சிலிம் புகைபிடிக் குழாய், தண்ணீர் டம்ளர்கள், குளிக்கும்போது அமரும் கல், சமையல் பாத்திரங்கள் போன்றவை பக்தர்களின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.

காகா என்றழைக்கப்பட்ட திரு. ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்களின் பிற பெயர்கள் காகா தீட்சித், காகா சாஹேப் தீக்ஷித், தீக்ஷித் போன்றவை ஆகும். அவர் 1864-இல் கந்த்வாவில் பிறந்தார். மும்பை உட்பட பல்வேறு இடங்களில் படித்து சட்டப்படிப்பில் தேறினார். வழக்கறிஞர் ஆகவும் பணியாற்றி புகழ் பெற்றார். அரசியலில் சட்ட மன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த முறையில் மக்கட் தொண்டாற்றினார். 


திரு.காகாவும், திரு.நானா சாஹேப் சந்தோர்க்கர் அவர்களும் மிக நெருங்கிய நண்பர்களாவர். 1906-இல் காகா இலண்டன் மாநகரத்தில் ஒரு நாள் இரயில் வண்டியில் ஏறும் போது கால் தவறி நடை மேடையில் விழுந்து விட்டார். கால் காயம்பட்டு நொண்டி நடக்க ஆரம்பித்தார். உள்காயம் பலமாக இருந்ததால் நரம்பு சுளுக்கு ஏற்பட்டு இருந்தது. இதனால் அவரால் நேராக நடக்க இயலவில்லை. இலண்டனில் சிறந்த மருத்துவ சிகிச்சைகள் பல எடுத்தும் அவரால் குணமடைந்து நேராக நடக்க முடியவில்லை. பிறகு 1909-இல் லோனாவாலாவிற்கு விடுமுறைக்காக சென்ற காகா தீட்சித் தனது பங்களாவில் தங்கினார். அங்கு தனது வகுப்புத் தோழனான நானா சாஹேப்பைச் சந்தித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பிறகு நானா சாஹேப் அரசாங்க உத்தியோகத்திலும் காகா சாஹேப் தனது சொந்த வக்கீல் தொழிலிலும் பணி புரிந்தனர். லோனாவாலாவில் அவர்கள் சந்தித்த பின் பல வருடங்களுக்குப் பிறகு நானாவின் அறிவுரைப் படி தீட்சித் ஷீரடிக்குச் செல்ல விரும்பினார். அப்போது காகா தனது மற்றொரு நண்பர் திரு.மிரீகர் உடன் அஹ்மத் நகரில் தங்கி இருந்தார். அதே சமயத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த தனது மாமியாரைப் பார்க்க திரு.ஷாமாவும் அஹ்மத் நகர் வந்திருந்தார். இதை அறிந்த மிரீகர், ஷாமாவின் மூலம் திரு.காகா ஷீரடி செல்ல ஏற்பாடு செய்தார்.

திரு.ஷாமாவுடன் திரு.காகா ரயில் நிலையம் அடைந்தபோது ரயிலில் பயணிக்க இடம் இல்லாத நிலையில் தனக்குத் தெரிந்த அதிகாரியின் உதவியால் முதல் வகுப்பில் இடம் பெற்றுப் பயணம் செய்ய ஆரம்பித்தார், காகா. அவர்கள் இருவரும் கோபர்காவன் சென்றடைந்தபின் நானாவைச் சந்தித்தனர். பின்பு மூவரும் ஷீரடி போய்ச் சேர்ந்தனர். முதன் முறையாக 02-11-1909 அன்று காகா ஷீரடிக்கு வந்து பாபாவின் தரிசனம் பெற்று பெருமகிழ்வடைந்தார். காகாவின் வருகைக்காக தாம் காத்திருந்ததாகவும் அவரை அழைத்துவரவே ஷாமாவை- தான் அனுப்பி இருந்ததாகவும் சாயிபாபா அவரிடம் கூறினார்.

ஷீரடி, லோனாவாலா, மற்றும் மும்பையில் உள்ள விலே பார்லே ஆகிய இடங்களில் இருந்த தனது வீடுகளுக்கு காகா தீட்சித், தமது நண்பர்களை மட்டுமல்ல, முன்பின் தெரியாத வழிப்போக்கர்களைக் கூட இலவசமாக உணவருந்த அழைத்த வண்ணம் இருந்தார். இதன் விளைவாக காகாவின் லோனாவாலா வீடு "அன்னதான ஹிந்து ஹோட்டல்" என்றழைக்கப்பட்டது. இந்நிலையில் அங்கு இருந்த ஹோட்டல்களின் வியாபாரம் தொடர முடியவில்லை. பாபாவின் உண்மை பக்தரான காகா, தமது விலே பார்லே வீட்டிலும் கூட பாபாவின் அடியொற்றி அன்ன தானம் செய்து, பூனைகள்-நாய்களுக்கும் கூட தடையேதுமின்றி பெருந்தன்மையுடன் தொடர்ந்து உணவளித்து வந்தார். ஷீரடியில் வசிப்பதற்கு கட்டிடங்கள் கட்ட 09-12-1909 அன்று பாபாவிடம் அனுமதி பெற்றார், காகா. கட்டிட வேலைகளையும் உடனே தொடங்கினார். அந்தக் குடியிருப்புக் கட்டிடங்கள் 1911-இல் முழுமை பெற்றன. அன்று கட்டப்பெற்ற முதலாவது கட்டிடமான தீட்சித் வாடா-வின் பழைமையான புகைப்படம் கீழே:


பாபா நிகழ்த்திய அற்புதச் செயல்களை தீட்சித் தனது மராத்தி நாட்குறிப்பு நூலில் விரிவாக பதிவு செய்து உள்ளார். 1909 முதல் 1918 வரையிலும், 1918 முதல் 1926 வரையிலும் காகா அவர்கள் எழுதிய குறிப்புக்கள் "தீக்ஷித்தின் டயரிக் குறிப்புக்கள்" என நூலாகவே வெளி வந்துள்ளது. ஷீரடியில் தங்கி இருந்த சமயம் ஒரு நாள் பாபா தமது கப்னி உடையினைப் பிரசாதமாக காக்காவுக்கு அளித்திருந்தார். ராமநவமி அன்று திறக்கப் பட்ட தீட்சித் வாடா, குருஸ்தானுக்கு எதிரே அமைந்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் ஓர் எளிமையான அறையில் தங்கி இருந்த காகா தீட்சித், மற்ற எல்லா இடத்தையும் ஷீரடி வரும் பக்தர்கள் இளைப்பாறக் கொடுத்து விட்டார். இவ் வாடாவில் தினமும் பூஜைகள் நடக்கும். இதே வாடாவில்தான் ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தை எழுதிய திரு. ஹேமத்பந்த் ஷீரடிக்கு வரும்போதெல்லாம் தங்கினார். 1990-ஆம் ஆண்டு வரை இக் கட்டிடம் 'போஜன் க்ரிஹா' அல்லது உணவுக்கூடமாக பயன்படுத்தப் பட்டது.                                                                    

இதன் சிறு பகுதி புத்தகங்களை படிக்கும் அறையாகவும், பிறகு பாபா பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய காட்சிக் கூடமாக (Museum Hall ) வும் பயன் படுத்தப் பட்டது. பூட்டிவாடாவில் பாபாவின் சமாதி அமைவதிலும், 1922-இல் சாயிபாபா சன்ஸ்தான் அமைப்பிலும், பெரும் பங்காற்றிய காகா அவர்கள் 1923-இல் "சாயி லீலா" மராத்திப் பத்திரிக்கையையும் தொடங்கினார். திரு. காகா சாஹேப் ஹரி சீதாராம் தீக்ஷித் அவர்கள் ஜூலை மாதம் 1926-இல் சாயி இறைவனடி சேர்ந்தார்கள். பற்பல ஆண்டுகளுக்கு முன்னால் சாயி பாபா அணிந்திருந்த அதே உடையினை ஷீரடி செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் கண்டுகளியுங்கள்.

(இத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது)

ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி

Saturday, October 11, 2014

Keerthan Sankeerthan - part 2

*கீர்த்தன்- சங்கீர்த்தன்* தொடர் - பகுதி 2



7. சங்கீர்த்தனத்தின் பிற பெயர்கள் யாவை?

பஜன், பஜனை, பக்தி சங்கீத குழு இசை, பக்தி கோஷ்டி கானம் என்று கூறலாம்.

8. சங்கீர்த்தனத்தில், வரலாற்றில் தலை சிறந்து விளங்கியவர்கள் யாவர்?

நாரத மாமுனிவர், தும்புரு கந்தர்வர், இராமபக்த ஹனுமார், பக்த ப்ரஹலாதர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், இதர நாயன்மார்கள், ஆழ்வார்கள், ரிஷி சுகதேவர், மீராபாய், ஆண்டாள், அருணகிரிநாதர், கபீர்தாஸ், துளசிதாஸ், சுவாமி சிவானந்தர், கிருபானந்த வாரியார் சுவாமிகள், குருநானக், தாஸ்கணு மஹராஜ், தர்மபுரம் சுவாமிநாதன், எம்.எம்.தண்டபாணி தேசிகர், கே.பி.சுந்தராம்பாள், பெங்களுரு ரமணி அம்மாள், பித்துக்குளி முருகதாஸ், வீரமணி மற்றும் பலர்.

9. சங்கீர்த்தனத்திற்கு உதவும் இன்னிசைக் கருவிகள் என்னென்ன?

தோலக் (Dholak), உடுக்கை (Dumroo), கஞ்சிரா (Kanjeera), சலங்கை (Ghungroos), மிருதங்கம், தாள், கடம் (Ghatam), தபலா, கோல் (Khol), மஞ்சீரா அல்லது ஜால்ரா (Manjeera), பக்கவாஜ் (Pakhawaj), பன்சூரி (Bansuri), ஹார்மோனியம், வீணை, தம்புரா, புல்லாங்குழல், ஜலதரங்கம், சிதார்,சுருதிப் பெட்டி, மற்றும் முக்கியமாக கர்தால் (Kartal) அல்லது சாப்ளாக் கட்டை.

10. சங்கீர்த்தனத்திற்கு வேண்டிய தகுதிகள் யாவை?

உண்மை சாயிபக்தி, விசுவாசம், பொறுமை, முழுமையான ஈடுபாடு, நல் நம்பிக்கை, இசையில் ஆர்வம், குழு ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சி.

11. எல்லோராலும் சங்கீர்த்தனம் செய்ய இயலுமா? இதற்கென தனி பயிற்சி, குரல் வளம், இசைக் கருவிகளில் திறன், சங்கீதப் பயிற்சி இவை வேண்டுமே ?

சங்கீர்த்தனம் அல்லது பஜனையின் சிறப்பம்சமே பொது மக்கள், பக்தர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எவ்வித கூச்சமோ, பயமோ, தயக்கமோ இல்லாமல் பங்கு பெற முடிவதுதான். இதற்கு ஓரளவு குரல் வளம், எளிமையான பாடல்கள், பாட்டு புத்தகங்கள், கர்தால் போன்ற அடிப்படைக் கருவிகள் இவை இருந்தாலே போதுமானது. "ஓம் சாயி ஸ்ரீ சாயி ஜெய ஜெய சாயி" போன்ற மஹா மந்திரங்கள் மட்டும் கூட போதுமானது. இந்த சங்கீர்த்தனம் அல்லது அகண்ட நாம சங்கீர்த்தனத்தில் ஒலித்தட்டு போல ஒரே ராகத்தில் திரும்பத் திரும்ப பாடாமல், வெவ்வேறு விதமாய் முயற்சித்தால் சுவை கூடும். குழுவினரின் மனமும், ஒருமுகமாய் கவனம் சிதறாது உற்சாகமாய் இருக்கும்.

வியாழன் தோறும் வீடுகளிலோ, பக்தர்கள் கூடும் சாயி மந்திர் அல்லது கோவில் சத்சங்கங்களிலோ, பொது சபைகளிலோ, எளிமையான முறையில் திட்டமிட்டு யாவரும் செய்யலாம். ஓரளவு பாடத் தெரிந்தவர்கள் முன்னெடுத்துச் செல்லலாம். எந்த திறமையும் கூடுதலாக இல்லாவிடினும் சாப்ளாக் கட்டை, மஞ்சீரா போன்ற சிறிய கருவிகளை வைத்துக் கொண்டே கூட, குழுவாக ஒன்று கூடி இசைத்து இன்புற்று பாபாவின் அருள் பெற்று மகிழலாம்.

12. சங்கீர்த்தனத்தால் கிடைக்கும் இதர நன்மைகள் யாவை?

- கவலைகள் மறந்து போகுதல் (Forgetting the Worries)
- மனதிற்கு ஓர் மாற்றமும், புத்துணர்ச்சியும் (Relaxation and Change)
- ஆண் பெண் இளைஞர், சிறுவர், சிறுமியர்க்கு நற்பழக்கம், மென் திறன்- சமுதாய திறன்கள் வெளிப்பாடு மற்றும் திறன் மேம்பாடு, மன ஓர்மை கிடைத்தல் (Good habits-Soft skills-People skills-Social skills development)
- குழு ஒற்றுமை உணர்வு (Team cohesiveness)
- உள்ளங்கைகள் அழுந்த கைதட்டிக் கொண்டே பாடுவதால் அல்லது ஆடுவதால் வர்மப் புள்ளிகள் நன்கு இயங்கப் பெற்று ஆரோக்கியம் அடைதல்
- ஆத்மார்த்தமான சங்கீர்த்தனத்தால் ஆக்க பூர்வமாக நேரம் செலவாவது (Creative Satisfaction and Entertainment)
- இதர சாயி பந்து ('Bha'nthu)க்களை அதாவது நம் சாயி சொந்தங்களைச்  சந்தித்து உரையாடும் வாய்ப்பு
- ஜாதி, பால், இனம், மதம், மொழி, துவேஷங்கள், வேறுபாடுகள் ஏதும் இல்லாமல் நட்பு உணர்வும் ஒற்றுமையும் ஏற்படுதல் (Unity and Harmony)
- உச்ச ஸ்தாயியில் (உரத்த குரலில்) கூட்டத்துடன் ஒன்றிணைந்து பாடும்போது நேரம், காலம், மனக் கவலை, துன்பம், வருத்தம், துயரம், பதட்டம், பிரச்சினைகள் எல்லாவற்றிலிருந்தும் சிறிது நேரமேனும் விடுபட்டு வழிபாட்டின் உன்னத நிலையைத் தொட முடிவது
- பஜனை முடிந்தபின் மனம் லேசாக, மனப் பளு அல்லது மன அழுத்தம் குறைய வாய்ப்பு
- ஆர்வமுடைய நண்பர்கள், பெற்றோர், உறவினர்கள், உற்றார், ஊர்மக்கள், முதியோர் என அனைவரும் பங்கு பெறும் வகையில் இம் முறை இருப்பது
- சாயி பந்துக்கள் அவ்வப்போது சந்திக்கும் வேளையில் அரசியல்- வம்பு-வேடிக்கை-விவாதப் பேச்சிற்கு இடமின்றி சாயிபாபாவைப் பற்றியோ, சொந்த பிரச்சினைகளைப் பற்றியோ (பஜனை முடிந்த பின் அல்லது வேறு நேரத்தில் மட்டும்) பிறரிடம் கலந்தாலோசித்து தெளிவினைப் பெற்றுக்கொள்வதற்கும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளவும்கூட வாய்ப்பாக அமையலாம்.
- எல்லாவற்றுக்கும் மேலாக சாயி நாம சங்கீர்த்தனமும், சாயி பெயரை உச்சரித்து நாம ஜெபமும் செய்வதே ஒரு பெரும் பாக்கியமாகும் (Real devotion, dedication, singing the glory of god, celebrating in a joyful way) அதன் பயன்களை ஒவ்வொருவரும் தனிப்பட்ட அனுபவத்தால் மட்டுமே முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.

(தொடரும்)










(Videos Courtesy: kvnvasu)

Thursday, October 2, 2014

Videos

ஒளிக்காட்சிகள் 
(Videos By: rOhiT BeHaL, Ramesh G, V Nookala, India TV)

ஷீரடியில் பாரத பிரதமர் உயர்திரு. நரேந்திர மோடி அவர்கள் 


மும்பையிலிருந்து 45 நிமிடங்களில் ஷீரடி சென்றடைய கடல் விமான சேவை !


மெல்பேர்ன், ஆஸ்திரேலியாவில் ஷீரடி சாயிபாபா ஆலய பிரதிஷ்டை 


ஷீரடி சாயிபாபா பூஜை, குவைத் 


அமெரிக்காவின் மசாசூசெட்ஸ், பில்லெரிகா சாயி கோவில்