Total Pageviews

Monday, February 10, 2014

Motivational Poem



விட்டுவிடாதே !



ஷீரடி சாயிபாபாவின் சன்மார்க்க நல்வழிப் பாதையில் நடந்து கொண்டே வாழ்வின் பெருஞ் சிக்கல்களுக்கு விடை கண்டு, நெடும் பயணத்தைத் தொடர்ந்து வரும் சாயிபக்திச் செல்வரே, சோதனையில் எழும் வேதனையைச்  சகித்து, புண்ணிய கர்மத்தை வளர்த்து, மனம் துவண்டு களைத்து விடாமல், விட்டு விலகாமல், அடுத்தடுத்து முயன்றால்தான் சாதனை பிறக்கும்.
நம் மனதிற்கு ஊக்கத்தை ஊட்டும் உற்சாகக் கவிதைதான், யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய         " Don't quit " என்கிற புகழ் பெற்ற கவிதை. அதை உமக்காகத் தமிழில் தருகிறோம்.... இதோ -



சில விஷயங்கள் சில வேளைகளில் 
தவறாகப்போய் விடும்போது 
கஷ்டப்பட்டு நெடுந்தூரம் கால்கடுக்க நடந்து 
செல்லும்உன் பாதையோ
வழுக்கி விடும் பாறைகளோடு மலைச்
சரிவாய் மேலே போகும்போது,

பணம் கைஇருப்புக் குறைவாக, 
கடன் அதிகமாகவும் இருக்கும்போது 
சிரிக்க விரும்பி அது முடியாமல்
நீ ஏக்கப் பெருமூச்சு விடலாம்
கொடும் கவலை உன்னைக் கீழேதள்ளி 
மெல்லமெல்ல அழுத்தும்போது,
 
வேண்டுமானால் சற்று இளைப்பாறு - 
ஆனால் நீ விட்டுவிடாதே!

முறுக்கிய சுற்றுக்களோடும் 
எதிர்பாரா திருப்பங்களோடும் 
வாழ்க்கை விநோதமானது.
நம்மில் ஒவ்வொருவரும் 
எப்போதாவது கற்றுக் கொள்வது -
'தோல்வி மேல்தோல்வி வந்தடைந்த வேளையில் 
அவர் முயற்சி யிலேயே முனைந்து இருந்தால்
வெற்றியை அடைந்து இருப்பார்' என்று. 


நடக்கும்வேகம் மெதுவாய்த் தோன்றலாம்...
ஆனால் நீ விட்டுவிடாதே!
அடுத்த அடியில் நீ ஜெயிக்கக் கூடும்!!

பல சமயங்களில் உன் குறிக்கோள் 
உள்ளது, மிக அருகிலேயே  -
மேலே போகத் தயங்கிமனந் தளர்ந்து 
பயந்தவர் நினைத்ததை விட.
பல சமயங்களில் போராடுபவர் கைவிட்டு விட்டார்  -
வெற்றிக் கோப்பை யினைதட்டிச் செல்லும் 
வாய்ப்பி ருந்தபோது.

இரவுநழுவும் வேளையிலே காலங்கடந்து போனபின்னே 
அறிந்து கொள்கிறார் -
தங்கக் கிரீடத்தை எடுத்துக் கொள்ள 
எவ்வளவு அருகே 
தான்நெருங்கி இருந்ததை.

தோல்வியாய் வெளியில் தெரியும் புரட்டிப்பார் 
அதனுள்ளே தான்வெற்றி -
வெளிறிய வெள்ளி அவநம்பிக்கை மேகங்கள் 
சூழ்ந்து அவற்றிடையே.
எவ்வளவு கிட்டத்தில் நீ நெருங்கி உள்ளாய் 
என்பதை எப்பொழுதும் கூற முடியாது -

தொலை தூரமாய் தோன்றும்போது 
அது அருகிலேயே இருக்கலாம்.
ஆகையால் மிகுந்த துர்பாக்கிய நிலைமை யிலும் 
நெஞ்சு உறுதி யுடன் போராடு..
நிலைமை மிக மோசமாய்த் தோன்றும்போது தான்  - 
நீ விட்டுவிடவே கூடாது..
நீ விட்டுவிடவே கூடாது...


சாயிராம் சாயிராம் சாயிராம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.