Total Pageviews

Sunday, May 27, 2012

Dr. Ramanand Sagar's Serial

டாக்டர் ராமானந்த் சாகரின் தொலைக்காட்சித் தொடர் 


டாக்டர் ராமானந்த் சாகர் அவர்கள் தமது விரிவான ஆராய்ச்சியின் பின்னர் உருவாக்கிய அற்புத தொலைக்காட்சித் தொடர்தான் அண்மைக்காலத்தில் விஜய் டிவி ஒளிபரப்பிய ஷீரடி சாயி பாபா என்ற தொடர் ஆகும். உலகமெங்கும் பக்தர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த தொடர் இப்போது டி வி டி/விசிடி குறுந்தட்டு வடிவில் கிடைக்கின்றது. ஹிந்தி மொழியில் கிடைக்கும் இந்த தொடர் பற்றிய தகவல் காண www.shoppingonlineindia.com என்ற இணையத் தளம் சென்று பார்க்கலாம்.

    நான்கு வருடங்கள் ஆராய்ச்சி செய்து, நூற்றுக்கணக்கான கலைஞர்களின் ஒத்துழைப்பில் பரோடா நகரின் சாகர் பிலிம் சிட்டியில் ஷீரடி போன்ற செட் அமைத்து இந்த காவியத் தொடரினை உருவாக்கி உள்ளார் டாக்டர் ராமானந்த் சாகர். புகழ்பெற்ற 'ராமாயணம்', 'கிருஷ்ணா' போன்ற தூர்தர்ஷன் தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசெம்பர் 12, 2005 அன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் எண்பத்து ஏழு வயதில் காலமானார். ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய அற்புத குறுந்தட்டுக்கள் இவை. இந்த தொடர் தமிழில் விற்பனைக்குக் கிடைத்தால் அருமை. உங்களுக்குத் தகவல் தெரிந்தால் கருத்துப் பகுதியில் பதிவு செய்யுங்கள்.


சாயி ஓம்.


Sunday, May 13, 2012

Sai Videos-2




(இணையத்தில் பதிவேற்றியவர்: 24*7zone11)

Sai Videos

சென்னை அம்பத்தூர் ஷீரடி சாயிபாபா கோவிலில் பாடகர் திரு. வீரமணி ராஜூ அவர்களின் பஜனை நிகழ்ச்சி 

(இணையத்தில் பதிவேற்றியவர் : kvnvasu)




(இணையத்தில் பதிவேற்றியவர் : priyasuria1910)


(இணையத்தில் பதிவேற்றியவர் : திருமதி B N கலா. திருமதி கலா அவர்களின் பாபா பற்றிய தமிழ் வலைப் பூ பார்வையிட முகவரி : http://srisaikala.blogspot.com ) 



(மலைசியா நாட்டில் நாகசாயி கோவில் !
இணையத்தில் பதிவேற்றியவர் : shanky45 ) 


Sunday, May 6, 2012

Movie 2

Movies !

திரைப்படங்கள்! 


           ஷீரடி சாயி நாதரைப் பற்றிய திரைப் படங்கள் பல இந்நாள் வரையில் வெளிவந்துள்ளன. பல இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படங்களில் ஒரு சில- இணைய உலகில் சில பக்தர்களால் பதிவேற்றம் செய்யப் பட்டு உள்ளன. அவற்றை நாம் தொடர்ந்து தேடிப் பிடித்து இவ் வலைப் பூவில் இணைத்து வருகிறோம். நண்பர்களே, பொதுவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக பாபாவின் ஆசி பெற்ற பல பக்தர்களின் உண்மைச் சம்பவங்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக் கொண்டு இத் திரைப்படங்களை மக்களின் ரசனைக்கேற்ப  உருவாக்கியுள்ளனர். இந்த திரைப் படங்களை சாதாரண பொழுதுபோக்கு படங்களாக கருதாமல் அந்த திரைப்படங்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து கண்டு களிப்போம்.